சிவகங்கை, ஜூன் 5- பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தின் சார்பில் மானாமதுரையில் ஜூன் 5 அன்று நடைபயண இயக்கம் நடைபெற் றது. சங்கத்தின் மாநிலத் தலைவர் கலா, மாநிலப் பொருளாளர் திலகவதி, மாநில துணைத் தலைவர் பேயத்தேவன், மாநில இணைச்செயலாளர் பாண்டி மீனாள் , மாநிலச் செயலாளர் பாண்டி உள்பட பலர் பங்கேற்றனர். அப்போது மாநிலத்தலைவர் கலா பேசுகையில், தமிழ்நாடு முழுவதும் 43 ஆயிரம் பள்ளி சத்துணவு மையங்கள் உள்ளன. இதில் 40 ஆயிரத்துக்கு மேற்பட்ட காலிப் பணியிடங்களை நிரப்பப்படாமல் உள்ளது. ஒரு சத்துணவு ஊழியர் மூன்று முதல் 7 பள்ளிகள் வரைக்கும் சத்துணவு மையங்களை கூடுதல் பொறுப்பாக கவ னித்து வர வேண்டியுள்ளது .சமையலர் மற்றும் உதவியாளர்கள் இல்லாமல் பல மையங்கள் செயல்படுத்த வேண்டிய நிலை உள்ளது. சத்துணவு ஊழியர்களின் ஊதியம் சிறப்பு காலமுறை ஊதியம் என பெயர் மாற்றினார்கள்.ஆனால் குறைந்த பட்ச ஊதியம் கிடைக்காத நிலை தொடர்கி றது. தேர்தல் காலத்தில் கொடுக்கப்பட்ட வாக்குறுதிப்படி சத்துணவு ஊழியர்களை அரசு ஊழியர்களாக மாற்ற வேண்டும் .ஊதிய உயர்வு வழங்க வேண்டும். தமிழக முதல்வரிடம் தேர்தல் வாக்குறுதியை நிறை வேற்ற வலியுறுத்தி ஜூன் 19ஆம் தேதி திருச்சியில் கோரிக்கை மாநாடு நடைபெறு கிறது. ஜூலை 15-இல் வாழ்வாதார உரிமை யும் வரையறுக்கப்பட்ட ஊதியம் கேட்டு மாவட்ட தலைநகரங்களில் பல்லாயிரக்க ணக்கான பெண்கள் பங்கேற்கும் பேரணி நடைபெற உள்ளது ஆகஸ்ட் 30ஆம் தேதி சென்னையில் தமிழக முதல்வரைச் சந்தித்து நீதி கேட்பது என்று முடிவு எடுத்து மக்களி டம் பிரச்சாரத்தை நடத்திக் கொண்டிருக்கி றோம் என்றார்.