திண்டுக்கல் மாவட்டத்தில் எண்ணும் எழுத்தும் பிரச்சாரம் திங்களன்று மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகம் முன்பிருந்து துவங்கியது. நிகழ்வில் மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் வளர்மதி, ஒட்டன்சத்திரம் மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் ஜெகநாதன், கல்வித்துறை அதிகாரிகள், இல்லம் தேடிக்கல்வி பொறுப்பாசிரியர்கள், இல்லம் தேடிக் கல்வி தன்னார்வலர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.