districts

மதுரை முக்கிய செய்திகள்

“மகாத்மா மண்ணில் மதவெறி” நூல்  மதுரையில் இன்று அறிமுக விழா 

மதுரை, ஜூலை 16- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அரசியல் தலை மைக்குழு உறுப்பினர் ஜி. ராமகிருஷ்ணன் எழுதிய “மகாத்மா மண்ணில் மதவெறி” நூல் அறிமுக விழா புரட்சிக்கவிஞர் மன்றம் சார்பில் ஜூலை 17 அன்று மாலையில் நடைபெறுகிறது. வடக்குமாசி வீதி மணியம்மை பள்ளியில் நடை பெறும் நிகழ்ச்சிக்கு புரட்சிக் கவிஞர் மன்ற தலைவர் பி. வரதராசன் தலைமை வகிக்கிறார். துணை மேயர் தி.நாக ராஜன் முன்னிலை வகிக்கிறார். தஞ்சை தமிழ் பல்கலைக்  கழக முன்னாள் துணைவேந்தர் முனைவர் ம. திருமலை நூலை அறிமுகம் செய்து உரையாற்றுகிறார். நூல் ஆசிரி யர் ஜி. ராமகிருஷ்ணன் ஏற்புரையாற்றுகிறார்.

பிரதமர் குடியிருப்பு திட்ட விவரங்களை  அறிய அலைபேசி எண்கள் அறிவிப்பு 

சிவகங்கை, ஜூலை 16- சிவகங்கை மாவட்டம் பிரதம மந்திரி குடியிருப்பு திட்ட பயனாளிகள் திட்டம் குறித்து முழு விபரங்களை யும் அறியாததால் வீடுகள் கட்டுவதில் பல்வேறு சிர மங்களை சந்தித்து வருகிறார்கள். எனவே இப்பிரச்ச னைக்கு தீர்வு காண பயனாளிகளுக்கு திட்டம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவது தொடர்பாக திட்டம் குறித்த அனைத்து விவரங்களையும் பயனாளிகள் அறிந்து கொள்ளும் வகையில் கையேடுகள் 2951 பயனாளி களுக்கு வழங்கப்பட்டது. ஊரக வளர்ச்சி- ஊராட்சித் துறையின் மூலம் செயல்படுத்தப்படும் ஒன்றிய மற்றும் மாநில அரசின் பல்வேறு திட்டங்கள் குறித்து பொதுமக்களுக்கு தெளிவு படுத்துவதற்கு பொதுமக்களிடம் இருந்து பெறப்படும் புகார்களை பதிவு செய்வதற்கு வசதியாக மாநில அள விலான குறைதீர்க்கும் மையம் சென்னை ஊரக வளர்ச்சி  இயக்கத்தில் மே 18 முதல் செயல்பட்டு வருகிறது. இக் குறைதீர்க்கும் மையம் திங்கள் முதல் வெள்ளிக்கிழமை வரை காலை 10 மணி முதல் மாலை 5.45 மணி வரை செயல்படும். பொதுமக்கள் இந்த மையத்தை தொடர்பு  கொள்ள 8925422215, 8925422216ஆகிய அலைபேசி எண் கள் ஒதுக்கப்பட்டுள்ளன என்று மாவட்ட ஆட்சித்தலை வர் மதுசூதன் ரெட்டி தெரிவித்துள்ளார்.

நீர்ப்பிடிப்பு பகுதியில் கனமழை  135 அடியாக உயர்ந்த முல்லைப்பெரியாறு அணை

தேனி, ஜூலை 16- நீர்ப்பிடிப்பு பகுதியில் பெய்து வரும் கன மழை காரணமாக நீர்வரத்து அதிகரித்து, முல்லைபெரியாறு அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 2 அடி அதிகரித்து 135 அடியாக உயர்ந்துள்ளது .  கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து வருவதால் பெரியாறு அணை நீர்ப்பிடிப்பு பகுதியில் கனமழை பெய்து வரு கிறது. இதனால் அணைக்கு தொடர்ந்து நீர்  வரத்து அதிகரித்த வண்ணம் உள்ளது. வெள்ளிக்கிழமை 133 அடியாக இருந்த நீர்மட்டம் சனிக்கிழமை காலை 135 அடியாகவும் உயர்ந்துள்ளது. 2 நாளில் அணையின் நீர்மட்  டம் 4 அடி உயர்ந்துள்ளது . அணைக்கு வினா டிக்கு 6700 கனஅடி நீர் வருகிறது. அணையில் இருந்து குடிநீர் மற்றும் பாசன தேவைகளுக்காக 1867 கன அடி தண்ணீர் திறந்துவிடப்படுகிறது. தொடர்மழை காரணமாக வைகை அணை நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. 71 அடி உயரம் உள்ள அணையின் தற்போதைய நீர்மட்டம் 56.96 அடியாக உள்ளது. வரத்து 1823 கன அடி, திறப்பு 969 கன அடி, இருப்பு 3046 மி.கன அடி. மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 49.20 அடியாகவும், சோத்துப்பாறை நீர்மட்டம் 71.34 அடியாகவும், உள்ளது. பெரியாறு 52.6, தேக்கடி  21.2, கூடலூர் 3, உத்தமபாளையம் 1.2 மி.மீ மழையளவு பதிவாகி உள்ளது.

விவசாயிகள் சங்க விருதுநகர் வடக்கு ஒன்றிய மாநாடு

விருதுநகர், ஜூலை 16- தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் விருதுநகர் வடக்கு ஒன்றிய மாநாடு கவலூரில் நடைபெற்றது. மாநாட்டிற்கு கோபாலகிருஷணன் தலைமை தாங்கி னார். கந்தசாமி, பெருமாள் ஆகியோர் முன்னிலை வகித்த னர். மாவட்டத் தலைவர் அ.விஜயமுருகன் துவக்கி வைத்துப் பேசினார். விவசாயிகள் சங்க நிர்வாகி பி.மங்கை யர்க்கரசி, விவசாயத் தொழிலாளர் சங்க ஒன்றிய கே. ராஜேந்திரன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வடக்கு  ஒன்றிய செயலாளர் ஆர்.முத்துவேலு ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். ஒன்றியத்  தலைவராக பெருமாள்ராஜ், செயலாளராக எஸ்.ரெங்க நாதன், பொருளாளராக பி.மங்கையற்கரசி ஆகியோர் உட்பட 11 பேர் கொண்ட ஒன்றியக்குழு தேர்வு செய்யப்  பட்டது. 

ஓய்வூதியர் சங்க சாத்தூர் மாநாடு

சாத்தூர், ஜூலை 16- அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்கத்தின் சாத்தூர்  வட்டார 6 ஆவது மாநாடு நடைபெற்றது. கிளைத் தலைவர்  பி.தனபாலகன் தலைமையேற்றார். துணைத்தலைவர் சேவியர் வரவேற்றார். அஞ்சலி தீர்மானத்தை ஜி.வைர முத்து வாசித்தார். செயலாளர் பி.சிவக்குமார் வேலை அறிக்கையையும், பொருளாளர் அய்யம்மாள் வரவு-செலவு அறிக்கையையும் சமர்ப்பித்தனர். ஆரம்பப்பள்ளி ஆசிரியர் சங்கத்தின் வட்ட தலை வர் தன்னாசி வாழ்த்துரை வழங்கினார். புதிய நிர்வாகி களை அறிமுகம் செய்து மாவட்ட செயலாளர் இராமசப்பு ராஜ் பேசினார். இதில் ஏராளமானோர் பங்கேற்றனர்.

சுமைப்பணி தொழிலாளர் சங்க பேரவை

தேனி, ஜூலை 16- சிஐடியு சுமைப்பணி தொழிலாளர் சங்க ஆண்டு பேரவை தேனி சிஐடியு மாவட்டக்குழு அலுவலகத்தில் நடைபெற்றது. பேரவைக்கு மாவட்ட உதவி தலைவர் நீலமலை தலைமை வகித்தார் .கட்டுமான தொழிலாளர் சங்க மாவட்ட  செயலாளர் ஜி.சண்முகம் பேரவையை துவக்கி வைத்தார்.  சிஐடியு மாவட்ட செயலாளர் எம்.ராமச்சந்திரன் வாழ்த்தி பேசினார். மாநிலச் செயலாளர் எஸ்.குணசேகரன் நிறைவு  செய்து பேசினார். பேரவையில் மாவட்ட தலைவராக எம். ராமச்சந்திரன், பொதுச்செயலாளராக என்.நீலமலை,  பொருளாளராக பி.சந்திரசேகர் ,துணைத் தலைவர்களாக  பி.முருகேசன், பாலமுருகன் ,துணைச் செயலாளர்களாக வீ.மோகன், ரத்தீஸ் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.

இணைய வழி வர்த்தகத்தில் மோசடி: கோவையைச் சேர்ந்த 2 பேர் கைது

தேனி, ஜூலை 16- தேனி அருகே தர்மாபுரியைச் சேர்ந்த விவசாயி யிடம் இணைய வழி வர்த்தகம் மூலம் ரூ.96 ஆயிரத்து  700 மதிப்பிலான வேளாண்மை விளைபொருள்களை பெற்றுக் கொண்டு மோசடி செய்ததாக வெள்ளிக்கிழமை, கோவையைச் சேர்ந்த 2 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். தர்மாபுரியைச் சேர்ந்தவர் விவசாயி தங்கவேல்(55). இவர், தனது நிலத்தில் விளைந்த நிலக் கடலை, எள், உளுந்து ஆகியவற்றை இணைய வழியில் விற்பனை செய்வதற்காக மொபைல் ஆப் மூலம் பதிவு செய்துள் ளார். இதை பார்த்து கோவையைச் சேர்ந்த நபர் ஒரு வர் கைபேசி மூலம் தங்கவேலை தொடர்பு கொண்டுள்  ளார். அவர், விளை பொருட்களை வாங்கிக் கொள்வதாக வும், அவற்றை கோவையில் உள்ள தங்களது சாய் ஸ்ரீ எண்டர்பிரைசஸ் முகவரிக்கு அனுப்பி வைக்குமாறும், பொருட்கள் வந்து சேர்ந்ததும் அதற்குரிய தொகையை வழங்கி விடுவதாகவும் கூறியுள்ளார். அதன்படி, கடந்த 2022, மே 24 ஆம் தேதி தங்கவேல்  மொத்தம் ரூ.96 ஆயிரத்து 700 க்கான 1,292 கிலோ நிலக்கடலை பருப்பு, தலா 20 கிலோ எள் மற்றும் உளுத்தம் பருப்பு ஆகியவற்றை கோவையைச் சேர்ந்த நபர்  குறிப்பிட்ட முகவரிக்கு லாரியில் பார்சல் மூலம் அனுப்பி வைத்துள்ளார். கோவையைச் சேர்ந்த நபர் அந்தப் பொருட்களை பெற்றுக் கொண்டு ரூ.96 ஆயிரத்து 700க்கான காசோலையை தங்கவேலுக்கு அனுப்பி வைத்துள்ளார். அந்த காசோலையை தங்கவேல் வங்கி யில் செலுத்திய போது, வங்கிக் கணக்கில் பணம் இல்லை என்று திருப்பி அனுப்பியுள்ளனர். இதையடுத்து தங்கவேல் கோவையைச் சேர்ந்த நபரிடம் கைபேசியில் தொடர்பு கொள்ள முயன்ற போது, அவர் கைபேசி அணைத்து வைத்திருந்துள்ளார். கோவை யில் அவர்கள் அளித்த முகவரியில் சென்று பார்த்த  போது, அது போலியானது என்பது தெரிய வந்துள்ளது.  இது குறித்து தேனி சைபர் கிரைம் பிரிவு போலீசாரிடம் தங்கவேல் புகார் அளித்தார். இந்தப் புகாரின் மீது வழக்கு பதிந்து விசாரணை நடத்திய போலீசார், தங்கவேலை இணைய வழி வர்த்த கத்தில் மோசடி செய்ததாக கோவை, குனியமுத்தூர் பகுதி யைச் சேர்ந்த காஜா மைதீன்(40) முகமது மாலிக்(55) ஆகியோரை கைது செய்தனர். இவர்களிடமிருந்து 6 கை பேசி, 18 சிம் கார்டு ஆகியவற்றை பறிமுதல் செய்து காவல் துறையினர் விசாரிக்கின்றனர்.

பள்ளி மாணவி பலாத்காரம்: கைதான நபருக்கு ஜாமீன் மறுப்பு

மதுரை, ஜூலை 16- சிவகங்கை மாவட்டம் பூவந்தியைச் சேர்ந்த வெள்ளை யன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல்  செய்த மனுவில், பள்ளி மாணவியை பாலியல் வல்லுறவு  கொண்டதாக தன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு தற்போது சிறையில் உள்ளேன் தனக்கு ஜாமீன் வழங்க  வேண்டும் என்று கோரியிருந்தார். இந்த மனு நீதிபதி ஜி. இளங்கோவன் முன் சனிக்கிழ மையன்று விசாரனைக்கு வந்தது. விசாரணையின் போது  அரசு தரப்பில் கூறுகையில், மனு தாரர் வெள்ளையன் மேலும் சிலர் சேர்ந்து பள்ளி மாணவியை பாலியல் பலாத்  காரம் செய்துள்ளார்கள். இதனால் மாணவி கர்ப்பம் அடைந்தார். இது குறித்த புகாரின் பேரில் 5 பேர் மீது  வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளனர். குற்றவாளிகள் பள்ளி மாணவியை ஆசை வார்த்தை கூறி தொடர்ந்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். இந்த வழக்கில் சிலருக்கு டிஎன்ஏ பரிசோதனை எடுக்கப் பட்டுள்ளது. மேலும் விசாரணை தற்போது நடைபெற்று வருகிறது. எனவே மனுதாரருக்கு ஜாமீன் வழங்கக் கூடாது என கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதனை பதிவு செய்த நீதிபதி, மாணவி பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார். இந்த வழக்கு தற்போது விசாரணை  நடைபெற்று வருகிறது. இந்நிலையில் குற்றச்சாட்டப் பட்டுள்ள மனுதாரர் ஜாமீன் வழங்கினால் வழக்கின் சாட்சி களை கலைக்க நேரிடும். மேலும் இது கடுமையான குற்றச்சாட்டாக இருப்பதால் நீதிமன்றம் மனுதாரருக்கு ஜாமீன் வழங்க முடியாது எனக்கூறி ஜாமின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

பேருந்து மோதி முதியவர் பலி 

பழனி, ஜூலை 16- திண்டுக்கல் மாவட்டம் பழனியை அடுத்த சிந்தல வாடம்பட்டி அருகே சைக்கிளில் சென்று கொண்டிருந்த இருளப்பன் (60) என்பவர் மீது தனியார் பேருந்து மோதி யது.  இதில் அவர் தூக்கி வீசப்பட்டதில் பேருந்து நிறுத்தத்  தில் நின்றுகொண்டிருந்த மயிலான் (65), அவரது மனைவி அருக்காணி (60) ஆகியோர் மீது விழுந்தார். இதில் அவர்கள் 2 பேரும் படுகாயமடைந்தனர்.இருளப்பன் உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து சத்திரப்பட்டி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சொத்து பிரச்சனையில் பெண் கொலை 

தேனி, ஜூலை 16- பெரியகுளம் அருகே தாமரைக்குளத்தை சேர்ந்த வெள்ளைச்சாமி மனைவி ராமுத்தாய் (60). இவர்களுக்கும் வெள்ளைச்சாமியின் தம்பியான ராஜூ(60) என்பவருக்கும் பொது வான தோட்டம் அப்பகுதியில் உள்ளது. இந்த தோட்டத்தின் மின் இணைப்பு ராமுத்தாய் பெய ரில் உள்ளது. அண்ணன்-தம்பி 2 பேரும் சொத்தை பிரித்து கொண்டனர். அப்போது தோட்டத்தையும், ராமுத்தாய் பெயரில் உள்ள  மின்இணைப்பையும் விற்க முடிவு செய்துள்ள னர். ஆனால் மின் இணைப்பு துண்டித்தால்  தன்னால் தண்ணீர் பாய்ச்ச முடியாது எனக் கூறி ராஜூ அவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடு பட்டார். ஆனால் அதற்கு வெள்ளைச்சாமி மற்றும் ராமுத்தாய் மறுத்துள்ளனர். இதனால் அவர்களுக்கிடையே முன்விரோதம் இருந்தது. சம்பவத்தன்று ராஜூ அரிவாளால் ராமுத் தாயை சரமாரியாக வெட்டினார். இதில் படு காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பலி யானார். இதுகுறித்து தென்கரை காவல் துறை யினர் வழக்கு பதிவு செய்து ராஜூவை கைது  செய்தனர்.

நத்தம் அருகே டிராக்டர்  கவிழ்ந்து வாலிபர் பலி

நத்தம், ஜூலை 16- திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே  குமரபட்டி புதூரை சேர்ந்தவர் வேல் தியாகு (27). டிராக்டர் ஓட்டுநரான இவர் பாதசிறுகுடியில் இருந்து குமரபட்டிக்கு டிராக்டரை ஓட்டிச் சென்றார். இவருடன் அதே பகுதியை சேர்ந்த விக்னேஷ்(26) என்பவர் சென்றுள்ளார்.குமரபட்டி பகுதியில் வந்து கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் டிராக்டர் கவிழ்ந்தது.இதில் விக்னேஷ் டிராக்டர் சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே பலியானார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு  வந்த நத்தம் போலீசார் சடலத்தை கைப் பற்றி நத்தம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்ப வம் தொடர்பாக காவல் ஆய்வாளர் தங்க முனிசாமி வழக்கு பதிவு செய்து டிராக்டர்  ஓட்டுநர் வேல் தியாகுவை கைது செய்து  விசாரணை நடத்தி வருகிறார்.