மதுரை, ஜூன் 18- மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வியாபாரிகள் மற்றும் பயணி கள் கோரிக்கை விடுத்துள்ளனர். நகர்ப்பேருந்துகளும் வெளி யூருக்குச் செல்லும் பேருந்துகளும் இயக்கப்படுகின்ற மதுரை மாட் டுத்தாவணி பேருந்து நிலையத் திற்கு தினந்தோறும் ஏராளமான மக்கள் வந்து செல்கின்றனர். கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த பேருந்து நிலையத்தில் பராம ரிப்புப் பணிகள் நடைபெறவில்லை. பல இடங்களில் கான்கிரீட் மேற் கூரை விரிசல் விட்டும் சில இடங்க ளில் பெயர்ந்து போயும் உள்ளது. மழை பெய்தால் நீர்க்கசிவு ஏற்படு கிறது. பல்வேறு இடங்களில் மேற் கூரைகள் பலமிழந்து கான்கிரிட் கம்பிகள் வெளியே தெரிகின்றன. இதனால் மேற்கூரை இடிந்து விழுமோ என்ற அச்சத்தில் பேருந்து நிலை யத்திற்கு வரும் பயணிகள் மற்றும் அங்குள்ள வியாபாரிகள் உள்ள னர்.
கட்டணக் கழிப்பறை நடத்துபவர்களின் அராஜகம்
பயணிகளுக்கான அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்பட வில்லை. பேருந்துகள் வந்து செல் லும் பகுதி குண்டும் குழியுமாக உள்ளது, சுத்திகரிக்கப்பட்ட குடி நீர் வழங்கும் ஆர்ஓ பிளான்ட் வைக்கப்பட்டுள்ள இடம் பராம ரிப்பற்ற நிலையில் மதுபோதைக் காரர்களின் இருப்பிடமாக உள் ளது, இலவச சிறுநீர் கழிப்பறை மூடப்பட்டு கிடக்கின்றது கட்டண கழிப்பறையில் சிறுநீர் கழிக்க ஐந்து ரூபாய் என்று போர்டு வைத் துள்ளார்கள். இதுகுறித்து அங்கிருக்கும் சில வியாபாரிகள் கூறுகையில், கட் டண கழிப்பறையை நடத்துபவர் கள்தான் இலவச சிறுநீர் கழிப்ப றையை மூடி வைத்துள்ளனர். அதி காரிகள் ஆய்வுக்கு வரும்பொழுது மட்டும் மாநகராட்சி ஊழியர்களி டம் சொல்லி அகற்றி விடுகிறார் கள். பேருந்து நிலையத்தில் கடை கள் வைத்துள்ளவர்களும் மாநக ராட்சி வழிகாட்டிய அடிப்படையில் கடைகளை வைப்பது கிடையாது. கடைகள் முன்பு மூன்றடி இடம் வேண்டும் என்று விதிகள் இருந்தா லும் அதை கடைப்பிடிக்காமல் 10 அடி தூரத்திற்கு கடைகளை வைத்து விடுகிறார்கள்.இதனால் கூட்ட நேரங்களில் மக்கள் நடந்து செல்வதற்கே பெரும் சிரமம் ஏற்படு கிறது. இதுபோக ஆதரவற்றவர் கள் பலரும் பேருந்து நிலையத்திற் கள் ஆங்காங்கே சுற்றித் திரிகின் றார்கள். இவர்களை மாவட்ட நிர் வாகம் கண்டறிந்து ஆதரவற்ற மையங்களுக்கு அனுப்ப வேண் டும்.
புத்தகங்களை விற்க குழந்தைகளை ஈடுபடுத்தும் நபர்கள்
குழந்தைத் தொழிலாளர்களை ஒழிக்க நடவடிக்கை எடுக்க வேண் டும் என்று தமிழக அரசும் மாவட்ட நிர்வாகமும் பெரும் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.இந் நிலையில் சக்கிமங்கலம், கல்மேடு பகுதிகளில் இருந்து சிறுவர்களை அழைத்து வந்து, புத்தகங்களை விற்கவும் பிச்சை எடுக்கவும் வைக் கிறார்கள். இவர்கள் பயணிகளிடம் புத்தகங்களை விற்பது அல்லது சாப்பிடுவதற்கு பணம் கொடுங்கள் என்று வாங்குகிறார்கள். இதை சிலர் தொழிலாகவே வைத்துக் கொண்டு, காலை நேரத்தில் இச் சிறுவர்களை அழைத்து வந்து விட்டுவிட்டு மாலை 4 மணிக்கு அழைத்துச்செல்கிறார்கள். குறிப் பாக ஜூன் 12ஆம் தேதி குழந்தை தொழிலாளர் ஒழிப்பு தினத்தன்று அதிகாரிகள் இப்பகுதியில் ஆய் வுக்கு வருவார்கள் என்று தெரிந்து கொண்டே அன்று ஒரு நாள் மட்டும் குழந்தைகளை இப்பகுதியில் காணவில்லை. ஆனால் மறுநாள் குழந்தைகள் அதிகம்பேர் புத்த கங்களை விற்கும் பணியில் ஈடு படுத்தப்பட்டனர். குழந்தைகளை இச்செயலில் ஈடுபடுத்தும் நபர் களை மாவட்ட நிர்வாகம் கண்ட றிந்து நடவடிக்கை எடுக்க வேண் டும். குழந்தைகளின் பெற்றோர் களை கண்டித்து குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும். மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தை எம். ஜி. ஆர். பேருந்து நிலையம் என்று அதிமுக ஆட்சி காலத்தில் பெயர் மாற்றினார்கள்.பெயர் மாற்றியதை தவிர 10 ஆண்டுகளில் எந்தவொரு பரா மரிப்பும் வசதிகளும் மேம்படுத் தப்படவில்லை. சிதிலமடைந் துள்ள கான்கிரீட் விழுந்து மக்கள் பாதிக்கப்படும் முன்னரே தற்போது உள்ள மாநகராட்சி மற்றும் மாவட்ட நிர்வாகம் மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.அடிப்படை வசதிகளை மேம் படுத்த வேண்டும் என்பதே பயணி கள் மற்றும் கடைகள் வைத்திருக் கும் உரிமையாளர்களின் கோரிக் கையாக உள்ளது.