districts

img

நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றிய கூட்டம்

சின்னாளப்பட்டி, மார்ச் 26- திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றிய கூட்டம் ஒன்றிய தலைவர் ரெஜினா நாய கம் தலைமையில் நடைபெற்றது. வட்டார வளர்ச்சி அலு வலர்கள் பஞ்சவர்ணம்,அண்ணாத்துரை ஆகியோர் முன்னிலை வகித்தனர், துணைத் தலைவர் யாகப்பன் வரவேற்றார். கூட்டத்தில் நிலக்கோட்டை நால்ரோடு பயணி யர் விடுதி பகுதியில் யூனியன் அலுவகத்திற்கு சொந்தமான வணிக வளாக கடைகளின் காலக்கெடுமுடிந்து இரண்டு  ஆண்டுகளாகியுள்ளதால் அதனை 1.04. 2023 க்கு பிறகு  காலி செய்துவிட்டு மீண்டும் புதிய நடத்தவும், அதேபோல  பேருந்து நிலையத்தின் தென்புறம் யூனியன் அலுவலகம் எதிரே புதிய 10-கடைகள் கட்டவும் தீர்மானம் நிறைவேற்ற னர். மேலும் மாதந்தோறும் மூன்று லட்சம் ரூபாய்  வரை சம்பளம் வழங்கப்படும் மஸ்தூர் பணியாளர்களை  முறைப்படுத்தி அவர்களுக்கான பணிகளை ஒதுக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. கூட்டத்தில் ஒன்றிய கவுன் சிலர்கள் அலுவலர்கள் உட்ப பலர்டகலந்து கொண்டனர்.முடிவில் அலுவலக மேலாளர் பாலமுருகன் நன்றி கூறி னார்.