districts

img

முல்லைப் பெரியாறு அணையில் மண்டல தலைமை பொறியாளர் ஆய்வு

தேனி, ஆக.3- முல்லைப் பெரியாறு அணையில் புதிதாக பொறுப்பேற்ற மண்டல தலைமைப் பொறியாளர் வி.ரவி ஆய்வு மேற்கொண் டார். பொறுப்பேற்ற பின்  முதன்முறையாக முல்லைப் பெரியாறு அணைக்கு வருகை புரிந்த மதுரை மண்டல தலைமை பொறியா ளர் வி.ரவி அணை பொறியா ளர்களுடன் முதலாம் பருவ நிலைக்கான ஆய்வுகளை மேற்கொண்டார். மெயின் அணை, பேபி அணை, மண் அணை, கேலரி பகுதிகள், உபரி நீர்  வழிந்தோடிகள், சீஸ்மோகி ராப் ,வல்லக்கடவு சாலை, தேக்கடி தலை மதகு பகுதி  மற்றும் பென்னிகுக் மணி மண்டபம் ஆகிய முக்கிய  பகுதிகளை ஆய்வு செய் தார். பின்னர் அணையில் பராமரிப்பு பணிகள், வெள்ள காலங்களில் எடுக்க  வேண்டிய முன்னெச்ச ரிக்கை நடவடிக்கை குறித்து அறிவுரை வழங்கினார். செயற்பொறியாளர் சாம் இர்வின், உதவி செயற்  பொறியாளர்கள் மயில்வாக னன், முருகேசன், ராஜ கோபால் உள்ளிட்ட அணை  பொறியாளர்கள் கலந்து கொண்டனர்.