districts

img

பரப்பாடியில் புதிய பேருந்து நிறுத்தம்

திருநெல்வேலி ,ஜூலை 8- பரப்பாடியில் ரூ.8 லட்சம் மதிப்பீட்டில் புதிய பேருந்து நிறுத்தம், கழிப்பறை வசதியுடன் மற்றும் ஆட்டோ நிறுத்தம் கட்டுமான பணிக்கு அடிக்கல் நாட்டி கட்டுமானப் பணியை சபாநாயகர் அப்பாவு வெள்ளிக் கிழமை தொடங்கி வைத்தார்.  மேலும் பரப்பாடி மற்றும் இளங்குளம் கிராமங்களில் 500 வீடுகளுக்கு தனிநபர் வீட்டு குடிநீர் இணைப்பு வழங்குதல் திட்டம் ரூ.21 லட்சம் மதிப்பில் தொடங்கி வைத்தார். புதுச்சேரி முதல் கோவங்குளம் வரை செல்லும் சாலையில் சிறிய பாலம் ரூ.32.84 லட்சம் மதிப்பீட்டில் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டப்பட்டது. மேலும் பரப்பாடியில் ரூ. 9.50 லட்சம் மதிப்பிலான அங்கன்வாடி கட்டிடத்தினையும் திறந்து வைத்து டி.வி.எஸ். அறக்கட்டளை மூலம் பரப்பாடி குளம் தூர்வாரும் பணிகளையும் தொடங்கி வைத்தார். தொடர்ந்து மூலக்கரைப்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் ஸ்மார்ட் வகுப்பறையை மாவட்ட ஆட்சியர் விஷ்ணு தலை மையில் சபாநாயகர் அப்பாவு திறந்து வைத்து வகுப்பில் நடத்தப்படும் பாட முறைகளை கேட்டு அறிந்து பார்வையிட்டார்.  நிகழ்ச்சியில் நெல்லை மாவட்ட ஊராட்சித் தலைவர் வி .எஸ். ஆர். ஜெகதீஷ், நாங்குநேரி ஊராட்சி ஒன்றிய தலைவர் சவுமியாஆரோக்கிய எட்வின், நாங்குநேரி தாசில்தார் பள்ளி மாணவ- மாணவிகள், பொது மக்கள் கலந்து கொண்டனர்.