மதுரை, ஆக.27- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை மாநகர் மாவட்ட தெற்கு பகுதிக் குழுவிற்கான புதிய கட்சி அலுவலகம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா புது இராமநாதபுரம் ரோடு (சிமெண்ட் ரோடு) மதுரை தெற்கு சட்டமன்ற உறுப்பி னர் அலுவலகம் அருகில் நடைபெற்றது. விழாவிற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தெற்கு பகுதிக்குழு செயலா ளர் ஜே.லெனின் தலைமை வகித்தார். மதுரை நாடாளு மன்ற உறுப்பினர் சு.வெங்க டேசன் அடிக்கல் நாட்டி, கட்டிட பணியினை துவக்கி வைத்தார். நிகழ்வில், மதிமுக சட்ட மன்ற உறுப்பினர் மு.பூமி நாதன், துணை மேயர் தி.நாக ராஜன், திமுக மண்டல தலை வர் முகேஷ் சர்மா, சிபிஎம் மாநகர் மாவட்டச் செயலா ளர் மா.கணேசன், மாநி லக்குழு உறுப்பினர் இரா.விஜயராஜன், மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் அ.ரமேஷ், ஜா.நரசிம்மன், ஆர்.சசிகலா, இரா.லெனின், டி.செல்வா, பகுதிக்குழு செயலாளர் ஜெ.லெனின், மாவட்டக்குழு உறுப்பினர் கண்ணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.