districts

img

மாங்குளம் ஆரம்பப்பள்ளியில் புதிய கட்டிடத்தை சு.வெங்கடேசன் எம்.பி., திறந்து வைத்தார்

மதுரை பிப் 16- மதுரை கிழக்கு தாலுகா  மாங்குளம் கிராமத்தில் இந்து உதவி பெறும் ஆரம் பப்பள்ளி 74 ஆவது ஆண்டு விழா மற்றும் புதிய கட்டிட திறப்பு விழா பிப்ரவரி 17 வியா ழனன்று நடைபெற்றது.  இந்நிகழ்ச்சிக்கு மாங்கு ளம் ஊராட்சி மன்றத் தலை வர் சத்தியா மகேந்திரன் தலைமை வகித்தார்.  பள்ளி  நிர்வாகி க. கூரி முன்னிலை வகித்தார். தலைமை ஆசிரியர் அ.லதாராணி வர வேற்றுப் பேசினார். மதுரை மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன் புதிய  கட்டிடத்தை திறந்து வைத்து, சிறப்புரையாற்றினார்.  இதில்  வட்டார கல்வி அலுவ லர் ஆர். எஸ்தர் ராணி, மாவட்ட கவுன்சிலர் வடி வேல் முருகன், மீனாட்சி புரம் ஊராட்சி மன்ற தலைவர் எஸ்.பாண்டீஸ்வரி சேவுகன்,  மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு உறுப்பினர் எஸ்.பாலா, மாவட்டக்குழு உறுப்பினர் எஸ்.மாயாண்டி, தாலு காச் செயலாளர் எம்.கலைச் செல்வன் மற்றும் தாலு காக்குழு உறுப்பினர்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். ஆசிரியர் ஆ.செல்வி நன்றி கூறினார்.  முன்னதாக பள்ளிக் குழந்தைகளின் கலை நிகழ்ச்சிகளை நாடாளு மன்ற உறுப்பினர் சு.வெங்க டேசன்  குழந்தைகளுடன் அமர்ந்து கண்டு ரசித்து  கரவொலி எழுப்பி மாணவி களை உற்சாகப்படுத்தினார்.  

;