நத்தம், மார்ச் 3- திண்டுக்கல் மாவட்டம் நத்தம் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் ஒன்றிய குழு கூட்டம் நடைபெற்றது. இதற்கு ஒன்றிய குழுத்தலை வர் ஆர்.வி.என். கண்ணன் தலை மை தாங்கினார். இதில் யூனியன் ஆணையாளர் முனியாண்டி, வட்டார வளர்ச்சி அலுவலர் கிருஷ்ணன் ஆகியோர் முன் னிலை வகித்தனர். கூட்ட அறிக் கையை உதவியாளர் கருப்பண பிள்ளை வாசித்தார். இதில், கொரோனா தடுப்புப் பணிகள், அடிப்படை வசதிகள் உள்ளிட்ட 57 தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன. கூட்டத்தில் ஒன்றிய கவுன்சிலர்கள், பல்வேறு துறை அலுவலர்களும் கலந்து கொண்டனர். எழுத்தர் கனகராஜ் நன்றி கூறினார்.