districts

img

நத்தம் ராம்சன்ஸ் பள்ளி ஆண்டு விழா

நத்தம், ஜன.29- திண்டுக்கல் மாவட்டம் நத்தம்-மெய்யம்பட்டியில் உள்ள ராம்சன்ஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் ஆண்டு  விழா நடைபெற்றது.  முன்னாள் துணைவேந்தர் திருமலை சாமி தலைமை தாங்கினார். பேரூராட்சி தலைவர் சேக்சிக்கந்தர்பாட்சா, முன்னாள் வணிகவியல் துறை துணைத்தலைவர் பாலசுப்பிரமணியன், பேராசிரியர் சுப்ர மணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.பள்ளியின் தாளாளர் ராமசாமி வரவேற்றார். விழாவில் முன்னாள்  அமைச்சரும் சட்டமன்ற உறுப்பினருமான நத்தம் விசுவ நாதன் மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கி  பேசினார். தொடர்ந்து மறைந்த பேராசிரியர் அய்க்கண் படத்தை புதுக்கோட்டை ஆதினம் தயானந்த சந்திரசேகர சுவாமிகள் திறந்து வைத்தார். விழாவில் காரைக்குடி வித்யாகிரி பள்ளிகள் தாளாளர் சுவாமிநாதன், பேராசி ரியர் இராமகிருஷ்ணன், டாக்டர் கணேசன், பள்ளி ஆட்சி மன்றக்குழு தலைவர் தனபாலன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். தொடர்ந்து மாணவ, மாணவிகளின் பல்வேறு  கலைநிகழ்ச்சிகளும், பரிசளிப்பு விழாவும் நடந்தது.முடி வில் பள்ளி ஆட்சி மன்ற குழு உறுப்பினர் பாஸ்கரன் நன்றி கூறினார்.

;