districts

img

குஜராத் இனப்படுகொலையின் தொடர்ச்சியே மணிப்பூரில் நடப்பது : எம்.வி.கோவிந்தன்

ஆலப்புழா, ஜுலை 27-  மணிப்பூரில் நடந்த கொலைகள் மற்றும் கலவரங்கள் தனிப்பட்ட சம்பவம் அல்ல என்றும் இது குஜராத் இனப்படுகொலையின் தொடர்ச்சி என்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் எம்.வி.கோவிந்தன் கூறினார். கேரளா முழுவதும் உள்ள 140 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் வியாழனன்று (ஜுலை 27) மணிப்பூரை பாதுகாப்போம் என்கிற முழக்கத்துடன் பெருந்திரள் மக்கள் சந்திப்பு இயக்கம் இடது ஜனநாயக முன்னணியால்  நடத்தப்பட்டது.ஆலப்புழா பூக்காவு சந்திப்பில்  ஏற்பாடு செய்யப்பட்ட ``சேவ் மணிப்பூர்’’ மக்கள் இயக்கத்தை  தொடங்கி வைத்து எம்.வி.கோவிந்தன் பேசுகையில்,  மணிப்பூரில் நடக்கும் வெட்கக்கேடான விசயங்களைப் பார்க்கும்போது எப்படி இந்தியா ஜனநாயக நாடு என்று சொல்ல முடியும். மணிப்பூரில் வகுப்புவாத கலவரம் இனப்படுகொலையாக மாறி வருகிறது. மணிப்பூர் விவகாரத்தில் பிரதமர் நாடாளுமன்றத்தில் பதில் அளிக்க வேண்டும். எங்கும் பற்றிப் படரும் விதையை பாஜக விதைத்துள்ளது. இது மணிப்பூருக்கு மட்டுமானது அல்ல. பொது சிவில் சட்டம் அதன் ஒரு பகுதியாகும். பொது சிவில் சட்டத்தை அமல்படுத்துவது அல்ல நோக்கம். இது பிரிவினைக்கான ஆயுதம் மட்டுமே. பொது சிவில் சட்டத்தை எதிர்க்கும் அனைவருடனும் ஒத்துழைப்போம். நாங்கள் எந்த வேலியும் அதற்கு எதிராக கட்ட மாட்டோம் என்றார் கோவிந்தன். மணிப்பூரில் நடக்கும் கலவரத்தை ஒன்றிய அரசு வேடிக்கை பார்த்து வருவதாகவும், இதற்காக உலக நாடுகளின் முன் இந்தியா தலைகுனிய வேண்டும் என்றும்  எல்டிஎப் அமைப்பாளர் இ.பி.ஜெயராஜன் கூறினார். கோழிக்கோடு முதல்குளத்தில் எல்.டி.எப் மக்கள் சங்மத்தை இ.பி.ஜெயராஜன் துவக்கி வைத்து பேசினார்.