districts

img

மே 1 இல் மூணாறு மலர் கண்காட்சி

தேனி, ஏப்.26- கேரளா சுற்றுலாத் துறை சார்  பில் புகழ்பெற்ற மூணாறு மலர் கண்  காட்சி மே 1 அன்று தொடங்கு கிறது.  தமிழக எல்லையில் அமைந் துள்ள இடுக்கி மாவட்டத்தில் சர்வ தேச சுற்றுலா தலமாக விளங்குகிற மூணாறில் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் மலர் கண்காட்சி, மூணாறு மேளா  போன்ற நிகழ்வு கள் நடைபெறும். கோடைகாலத்தை முன்னிட்டு மலர் கண்காட்சி நடத் தப்படுவது வழக்கம். இதன்படி சுற்றுலாத்துறை சார்பில் இந்த ஆண்டுக்கான கண்  காட்சி மே 1-இல் தொடங்கி 10 ஆம்  தேதி வரை நடைபெற உள்ளது. மூணாறு பாலாற்றின் கரை அருகே உள்ள தாவரவியல் பூங்கா வில் நடைபெறும் கண்காட்சியில் ஆயிரத்து 500-க்கும் மேற்பட்ட பூக்  கள் இடம் பெற உள்ளன.காலை  8 மணி முதல் இரவு 9 மணி வரை  பார்வையாளர்கள் அனுமதிக் கப்படுவர். தினமும் மாலையில் கலை மற்றும் கலாச்சார நிகழ்ச்சி கள் நடைபெறும்.நுழைவுக்கட்ட ணம் ரூ.60, சிறுவர்களுக்கு ரூ.35 ஆகும்.  எட்டு ஏக்கர் நிலத்தில் உள்ள  தாவரவியல் பூங்காவில் மேலஸ்டோமா, இம்பேப்பன்ஸ், மட்னோலியா, கிராண்டிபோரா, மக்னோலியா, லில்லி ப்ளோரா உள்ளிட்ட பலவகையான ரோஜாக் கள், 30 வகையான ஷீனியா, 31  வகையான அஷ்லியா, 7 வகை யான கமேலியா மலர்கள் இடம் பெறுகின்றன.