districts

விடியலைத் தேடும் நகராட்சி, மாநகராட்சி ஊழியர்கள் - பழனி கா.முருகானந்தம்

நகராட்சி, மாநகராட்சி ஊழியர்கள் 8 ஆவது மாநில மாநாடு சேலத்தில் 1989 –ம் ஆண்டு நடைபெற்றது. அப்போதைய தமிழக முதல்வர் கலைஞர் அவர்கள் கலந்து கொண்டு நகராட்சி ஊழி யர்களை அரசு ஊழியர்களாக அறிவித்து,  கருவூலம் மூலம் ஊதியமும் ஓய்வூதியமும் வழங்கப்படும் என அறிவித்து அரசாணை வெளியிடப்பட்டது.  1994-ல் நகராட்சி ஊழியர்கள் மாத ஊதி யம் பெறுவதில் சிரமம் ஏறபட்ட சூழ்நிலை யில் நகராட்சி ஊழியர்கள் ஒன்றுபட்டு போராடி அன்றைய முதல்வர் ஜெயலலிதா அவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தி பெறப்பட்டதுதான் மாநில நிதி குழு மானி யம் ஆகும். 

கேள்விக்குறியான ஊதியம்
இந்த மானிய நிதி நகராட்சி மாநகராட்சி ஊழியர்களின் ஊதியம் மற்றும் ஓய்வூ தியத்திற்கு என தெரிவிக்கப்பட்டு இருந்தது.  காலப்போக்கில் நகராட்சி மாநகராட்சி களால் வாங்கிய கடன் நிலுவைத் தொகை மற்றும் வட்டி போன்றவற்றிற்காக பிடித்தம் செய்யப்பட்டு குறைந்த நிதியை மட்டும் நக ராட்சி மாநகராட்சிகளுக்கு வழங்குவதால் ஊதியம் மற்றும் ஓய்வூதியம் வழங்க முடியா மல், நகராட்சி மாநகராட்சி திணறி வரு கின்றன. இதனால் மாத இறுதி நாளில் நகராட்சி மாநகராட்சி ஊழியர்கள் ஊதியம் பெறுவது கேள்விக்குறியாக உள்ளது. ஒரு சில நகராட்சி மாநகராட்சிகளில் இரண்டு மூன்று மாதங்கள் வரை ஊதியம் வழங்கப்  படாத நிலை தொடர்கிறது.  நகராட்சி மாநகராட்சிகளில் ஊழியர்  களுக்கு காலம் கடந்து ஊதியம் வழங்கினா லும் அவர்களின் ஊதியத்தில் பிடித்தம் செய்யப்பட்ட பொது வருங்கால வைப்பு நிதி, புதிய ஓய்வூதிய நிதி, ஆயுள் காப்பீட்டு சந்தா, கூட்டுறவு கடன் சங்க பிடித்தம் தொகையை உரிய தலைப்புகளில் செலுத்துவதில்லை. இதனால் கூட்டுறவு கடன் சங்கத்திலிருந்து கடன் பெற்ற ஊழி யர்களுக்கு கூட்டு வட்டி மற்றும் மீண்டும் கடன் பெற முடியாத சூழ்நிலை உள்ளது. பொது வருங்கால வைப்பு நிதியில் ஊழி யர்களின் பணமிருந்தும் அவர்களின் அவசர தேவைக்கு கடன் பெறமுடியாத சூழ்நிலை உள்ளது.  நகராட்சி ஊழியர்களுக்கு பணி மாறு தல் செய்யப்பட்ட பிறகும் அவர்களது பொது  வருங்கால வைப்பு நிதி தொகையை மாறு தல் செய்யப்பட்ட நகராட்சிக்கு அனுப்பாமல் உள்ளதால் அந்த நிதியை அவசர தேவைக்கு பயன்படுத்த முடியாத போக்கு தொடர்கிறது.

பதவி உயர்வுகள் தாமதம் புதிய தரம் உயர்த்தப்பட்ட நகராட்சி களுக்கு ஆணையர் பணியிடம் மற்றும் தரம் உயர்த்தபட்டு வருகிறது. அதே போன்று அணைத்து பணியிடங்களும் தரம் உயர்த்தப்பட வேண்டும். உரிய பணியிடங் கள் தோற்றுவிக்கப்படாததால் மக்களின்  அடிப்படை தேவைகளை உடனடியாக நிறைவேற்ற இயலாத நிலை மற்றும் ஊழி யர்களுக்கு அதிக பணிச்சுமை ஏற்படு கிறது.  புதிதாக தோற்றுவிக்கப்பட்ட மாநக ராட்சிகளுக்கு ஆணையர் பணியிடம் மட்டுமே தரம் உயர்த்தப்படுகிறது. மாநக ராட்சிகளுக்கான மண்டல அலுவலகம்  உருவாக்கப்படவில்லை. மாநகராட்சிகளில் மண்டல அலுவலகங்கள் உருவாக்கி உரிய பணியிடங்கள் தோற்றுவிக்கப்பட்டால் மட்டுமே மாநகராட்சி ஊழியர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும் நிலை ஏற்படும்.  1.10.1996.க்கு முன்பாக பணியில் சேர்ந்த  தினக்கூலி மற்றும் பதிலி ஊழியர்களை நிரந்தரபடுத்தி பல்வேறு அரசாணைகள் வெளியிடப்பட்டது. 1.1.1997.க்கு பின்பு, 1.1. 2004.க்கு முன்பாக காலமுறை ஊதியத்தில் கொண்டுவரப்பட்ட நகராட்சி மாநகராட்சி ஊழியர்களுக்கு பணிவரன்முறை தேதி 23.2.2006. என அறிவிக்கப்பட்டது.

இதன்  காரணமாக 1.4.2003க்கு முன்பாக பணியில்  சேர்ந்த ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதி யம் அமல்படுத்தப்படாமல் புதிய ஓய்வூதிய திட்டம் தான் பொருந்தும் என உள்ளாட்சி நிதி தணிக்கை துறையால் ஓய்வூதிய முன் மொழிவுகளை திரும்ப அனுப்பப்பட்டு ஓய்வூதியம் மறுக்கப்பட்டதால் 1500 ஊழி யர்களுக்கு ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியம் கிடைக்காமல் நகராட்சி ஊழி யர்களின் குடும்பம் துயரில் சிக்கியுள்ள நிலை உள்ளது.  ஆனால் இதே காலகட்டத்தில் பேரூ ராட்சி ஊழியர்களுக்கு அரசாணை வெளி யிடப்பட்டு ஓராண்டு மற்றும் மூன்  றாண்டுகள் தொகுப்பூதிய காலமுறை  ஊதிய விகிதத்தில் கொண்டுவரப்பட்டது டன் பழைய ஓய்வூதிய திட்டத்தின் கீழ் ஓய்வூ தியம் பெற்று வருகிறார்கள். இது நகராட்சி ஊழியர்களுக்கு இழைக்கப்பட்ட பெரும் அநீதியாக உள்ளது. நகராட்சி மாநகராட்சிகளில் பணியா றறும் ஊழியர்களுக்கு பதவி உயர்வு கிடைக்  காமல் பணியில் சேர்ந்த அதே பதவியி லேயே கடைசி வரை பணியாற்றி ஓய்வு பெறுகின்றனர். உதாரணமாக மின் கம்பி யாளர் மின்கம்பி உதவியாளர் பொறி யியற்பிரிவு பணியாளர்கள் அலுவலக உதவியாளர்கள் தூய்மை பணியாளர்கள் உள்ளிட்டோர் உரிய தகுதி இருந்தும் பதவி  உயர்வு காலதாமதம் ஆவதால் பதவி உயர்வு ஏதுமின்றி பணியாற்றி ஓய்வு பெறுகின்றனர்.

உழைப்புச் சுரண்டலை கைவிடுக!
மாநகராட்சிகளில் மண்டலங்களுக்கு பொது சுகாதார பிரிவில் சுகாதார அலுவலர் பணியிடம் உருவாக்கி அவர்களுக்கான  பதவி உயர்வு வழங்கப்பட வேண்டும். அதே போல் நகராட்சி நிர்வாக மண்டல அலுவல கத்தில் பொது சுகாதார பிரிவிற்கு மண்டல சுகாதார அலுவலர் பணியிடம் தோற்றுவிக் கப்பட வேண்டும்.  நகராட்சி மாநகராட்சிகளுடன் இணைக் கப்பட்ட ஊராட்சி, பேரூராட்சிகளில் பணி யாற்றிய தூய்மைப்பணியாளர்கள், குடிநீர்  தொட்டி தேக்க பணியாளர்கள் தொகுப்பூதி யத்திலேயே பணியாற்றி வருகின்றனர். நக ராட்சி மாநகராட்சி ஊழியர்கள் செய்யக் கூடிய அதே பணியை இந்த ஊழியர்களும் மேற்கொண்டு வருகின்றனர். இவர் களுக்கு காலமுறை ஊதியம் வழங்காமல் உழைப்புச் சுரண்டலை நகராட்சி நிர்வாகம் மேற்கொள்வதை கைவிட்டு அனைவரு ககும் காலமுறை ஊதியம் வழங்க வேண்டும்.  நகராட்சி மாநகராட்சிகளில் அத்தியா வசிய பணிகளை ஒப்பந்தம் மற்றும் அவுட் சோர்சிங் முறையில் பணி வழங்கப்படு வதால் இயற்கை இடர்பாடுகளின் போது  பெரும் சிரமம் ஏற்படுகிறது. இக்கட்டான  கால சூழ்நிலையில் நிரந்தர பணியாளர் களால் மட்டுமே நிவாரணப் பணிகளை மேற்கொள்ளும் நிலை உள்ளது. ஆகவே ஒப்பந்தம் மற்றும் அவுட்சோர்சிங் முறையை கைவிட வேண்டும்.

ஆணையர் பணியிடங்கள்
ஆணையர் மற்றும் உதவி ஆணையர் பணியிடங்களில் நகராட்சி, மாநகராட்சி ஊழியர்களுக்கு உரிய பதவி உயர்வு வாய்ப்புகள் மறுக்கப்பட்டு வருகின்றன. மாநகராட்சி ஊழியர்களுக்கு பதவி உயர்வு குறிப்பிட்ட காலத்திற்குள் வழங்கப்படாததால் மாநகராட்சி உதவி ஆணையர் பணியிடங்களில் மாநகராட்சி ஊழியர்களுக்கு வழங்காமல் பிற துறை ஊழியர்களுக்கு உதவி ஆணையர் பணி வழங்குவதால் மாநகராட்சி ஊழியர்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். இத்த கைய சூழ்நிலையில் ஒன்பதாம் மாநில மாநாடு மதுரை மாவட்டம், மேலூரில் ஜூன்  19 (இன்று) நடைபெற உள்ளது.  மேற்கண்ட பிரச்சனைகளை விவா தித்து, தீர்மானங்களை நிறைவேற்றவுள்ளது.