திருவில்லிபுத்தூர் ரைட்டன்பட்டி பகுதியில் குப்பைகளை அகற்ற நகராட்சி நிர்வாகம் முன்வராததால் திமுக கவுன்சிலர்கள் கவுசல்யா, சரவணக்குமார் ஆகியோர் தாங்களே குப்பையை அள்ளிக்கொண்டு வந்து நகராட்சி அலுவலகத்தில் ஒப்படைத்தனர். இதுகுறித்து ஆணையர் ராஜமாணிக்கம் பேச்சு வார்த்தை நடத்தி இரு நாட்களுக்குள் குப்பை அகற்றப்படும் என உறுதி அளித்தார்.