டிச.21இல் ஊர்க்காவல் படை வீரர்கள் தேர்வு
தூத்துக்குடி, டிச.15- தூத்துக்குடி மாவட்டத்தில் ஊர்க்காவல் படைக்கு வருகிற 21ஆம் தேதி ஆண்கள் மற்றும் பெண்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இது குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எல். பாலாஜி சரவணன் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தூத்துக் குடி மாவட்டத்தில் 35 ஆண்கள், 6 பெண்கள் என 41 ஊர்க்காவல் படை பணியிடங்களை நிரப்ப தேர்வு செய்யப்பட உள்ளனர். இதில் 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களாகவும், 18 வயதுக்கு குறையாமலும் 45 வயதுக்கு மிகாமலும் இருப்பவர்களாகவும் சேவை மனப்பான்மையுடனும், தூத்துக்குடி மாவட்ட எல்லைக்குள் வசிப்பவர்களாகவும், எவ்வித குற்ற பின்னணி இல்லாதவராகவும் உள்ள ஆண்கள் மற்றும் பெண்கள் இத்தேர்வில் கலந்து கொள்ளலாம். இத்தேர்வு வருகிற 21.12.2022 அன்று காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை தூத்துக்குடி மாவட்ட காவல் துறை அலுவலக கவாத்து மைதானத்தில் வைத்து நடை பெற உள்ளது. மேற்படி தேர்வில் கலந்து கொள்ள வருப வர்கள் தங்கள் கல்வி, வயது நிரூபண அசல் மற்றும் நகல் சான்றிதழ்களுடன் வர வேண்டும் என மாவட்ட காவல் கண் காணிப்பாளர் எல்.பாலாஜி சரவணன் தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கு கடத்த முயன்ற பீடி இலை பறிமுதல் : 6 பேர் கைது
தூத்துக்குடி டிச 15: தூத்துக்குடி மாவட்டத்தில் இருந்து இலங்கைக்கு பல்வேறு அத்தியாவசிய பொருட்கள் தொடர்ந்து கடத்தப்பட்டு வருகின்றன. அதேபோல் கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள், பீடி இலை கடத்தலும் அதிகரித்து உள்ளது. இதனால் கடலோர பகுதிகளில் கண்காணிப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது. ஆனாலும் தொடர்ச்சியாக கடத்தல் சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. இந்நிலையில் புதனன்று தூத்துக்குடி கடலோர காவல்படையினர் ரோந்து கப்பல் வஜ்ரா மூலம் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது, மணப் பாட்டில் இருந்து 40 கடல் மைல் தொலைவில் சந்தேகப் படும்படியாக ஒரு படகு நின்று கொண்டு இருந்தது. அதில் கடலோர காவல்படையினர் சோதனை செய்தனர். அப்போது, படகில் சாக்கு மூட்டைகளில் சுமார் 3.5 டன் பீடி இலைகள் பதுக்கி வைக்கப்பட்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. படகில் இருந்த காட்வின், பிச்சையா, மில்டன், டார்ஜன், ரட்சகர், கிங் ஆகிய 6 பேரை மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர். அதில் பீடி இலைகளை இலங்கைக்கு கடத்தி செல்ல முயன்றது தெரியவந்தது. இதையடுத்து படகு மற்றும் பீடி இலை மூட்டைகளை கடலோர காவல்படை யினர் பறிமுதல் செய்தனர். பின்னர் பீடி இலை, படகு மற்றும் 6 பேரையும் தூத்துக்குடிக்கு அழைத்து வந்து, சுங்கத்துறையினரிடம் ஒப்படைக்க கடலோர காவல்படையினர் நடவடிக்கை எடுத்தனர். பிடிபட்ட பீடி இலையின் சர்வதேச மதிப்பு ரூ.30 லட்சம் என்று கூறப்படுகிறது.
சிறப்பு மக்கள் தொடர்பு முகாமில் நலத்திட்ட உதவி : ஆட்சியர் வழங்கினார்
தூத்துக்குடி ,டிச. 15 பசுவந்தனையில் நடைபெற்ற சிறப்பு மக்கள் தொடர்பு முகாமில் நலத்திட்ட உதவிகளை ஆட்சியர் செந்தில்ராஜ் வழங்கினார். தூத்துக்குடி மாவட்டம், ஒட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றியம் பசுவந்தனை ஊராட்சி துர்கா மஹாலில் மாவட்ட ஆட்சியர கி.செந்தில்ராஜ் தலைமையில் வியாழனன்று மக்கள் தொடர்பு திட்ட முகாம் நடைபெற்றது. இதில் 72 பயனாளி களுக்கு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கி பேசினார். தமிழக அரசால் வழங்கப்படும் அனைத்து திட்டங்க ளையும் பொதுமக்களாகிய நீங்கள் முறையாக பயன்படுத் திக் கொள்ள வேண்டும். நமது கிராமத்தை ஒருமுன்மாதிரி கிராமமாக மாற்றுவதற்கு அனைத்து மக்களும்முழு ஒத்துழைப்பு வேண்டுமென்று கேட்டுக் கொண்டார். இந்நிகழ்ச்சியில் கோவில்பட்டி வருவாய் கோட்டாட்சி யர் கா.மகாலட்சுமி , ஒட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றிய குழு பெருந்தலைவர் எல்.ரமேஷ், பசுவந்தனை ஊராட்சி மன்ற தலைவர் லட்சுமிசிதம்பரம், வட்டாட்சியர் நிஷாந் தினி மற்றும் அனைத்து துறை அலுவலர்கள், பொது மக்கள் பலர் கலந்து கொண்டனர்.
23846 ஹெக்டேரில் நெல் சாகுபடி
விவசாயிகள் குறை தீர் கூட்டத்தில் தகவல்
தென்காசி, டிச.15 தென்காசி மாவட்டத்தில் விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் ப.ஆகாஷ் தலைமையில் மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் வியாழனன்று நடைபெற்றது. கூட்டத்தில் தென்காசி மாவட்டத்தில் இது வரை சாகுபடி செய்யப்பட்ட நெல் - 23846 ஹெக்டேர், சிறுதானியங்கள்- 19430 ஹெக்டேர், பயறு வகைகள் - 29195 ஹெக்டேர் ,பருத்தி - 3833, கரும்பு - 1799 ஹெக்டேர், எண்ணெய் வித்து - 1203 ஹெக்டேர் பரப்பும் ஒத்திசைவு செய்யப்பட்டது. மழையளவு நீர் இருப்பு விபரம் மற்றும் இடுபொருட்கள் இருப்பு விபரம் அனைத்து விவசாயிகளுக்கும் தெரி விக்கப்பட்டது. வேளாண்மை உழவர் நலத்துறை மூலம் ஒரு பயனாளிக்கு தலா ரூ 4000- மானியத்துடன் நெல் விதைப்பு உருளைக் கருவி , இரண்டு பய னாளிகளுக்கு தென்னை மரம் ஏறும் கருவிகள் மற்றும் மூன்று பயனாளிகளுக்கு மாநில வேளாண்மை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் மானிய மாக ரூ 60 ஒரு ஏக்கருக்கு என்ற வீதத்தில் நெல் வயல்களில் வரப்பு பயிராக வம்பன்-8 ரக உளுந்து விதைகள் ஒரு பயனாளிக்கும் தோட்டக்கலைத் துறை மூலம் வாழைத்தார் உறை ஒரு பயனா ளிக்கு ரூ .5000- மதிப்பிலும் தமிழ்நாடு நீர்வள நில வள திட்டத்தின் கீழ் ரூ 16000- மதிப்பில் வீரிய ரக ஒட்டு வெண்டை விதைகள் ஒரு பயனாளிக்கும் ரூ 2500- ஒட்டு ரக காய்கறிகளுக்கான இடுபொருட் கள் ஒரு பயனாளிக்கும் மாவட்ட ஆட்சித் தலை வர் வழங்கினார். கூட்டத்தில் கடையநல்லூர் மற்றும் கடையம் வட்டார வேளாண்மைத் துறையினர் மற்றும் கீழப்பாவூர் மற்றும் தென்காசி வட்டார தோட்டக் கலைத் துறையினர் ஏற்பாடு செய்திருந்த விவ சாய கண்காட்சியினை மாவட்ட ஆட்சித் தலைவர் பார்வையிட்டார். விவசாயப் பெருமக்களும் திரளாகப் பார்வையிட்டனர். சுரண்டை தென்றல் உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தினரின் மதிப்பு கூட்டப் பட்ட பொருட்களின் கண்காட்சி யையும் கபே இயற்கை தேனீ பண்ணை பொருட்களையும் திரளானோர் கண்டு களித்த னர். விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பெறப்பட்ட 227 மனுக்களுக்கும் 14 நாட்களுக்குள் விரிவான மற்றும் பதிலை வழங்குமாறு அனைத்து துறை அலுவலர்களுக்கும் மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தினார். இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் இரா. ஜெய்னுலாப்தீன், வேளாண்மை இணை இயக்குநர் தா.தமிழ்மலர்,வேளாண்மை துணை இயக்குநர்(திட்டங்கள்) ந.க.நல்லமுத்துராஜா , தோட்டக்கலை துணை இயக்குநர் ஜெயபாரதி மாலதி,அனைத்து வட்டார வேளாண்மை உதவி இயக்குநர்கள், அனைத்து வட்டார தோட்டக் கலை உதவி இயக்குநர்கள், அனைத்து துறை அலுவலர்கள் அனைத்து விவசாய சங்க பிரதி நிதிகள் , விவசாயிகள் கலந்து கொண்டனர்.
டிச. 18இல் பாவூர்சத்திரம்- தென்காசி தண்டவாள பராமரிப்புப் பணி
தென்காசி, டிச.15 செய்தி மக்கள் தொடர்புஅலுவலகம் வெளி யிட்டுள்ள செய்தி குறிப்பு: தென்காசி மாவட்டத்தில் 18.12.2022 ஞாயிற்றுகிழமை காலை 10 மணி முதல் மாலை 5 மணி தண்டவாள பராமரிப்பு பணிகளுக்கான எல் சி எண். 83 (பாவூர்சத்திரம் ரயில்வே கேட்) கிலோ மீட்டர் 90/ 600-700 பாவூர்சத்திரம் - தென்காசி ரயில்வே கேட் மூடப்படுவதால் வாகன ஓட்டிகள் மாற்று பாதையில் செல்லுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
நெல்லை வழி செல்லும் அனந்தபுரி விரைவு ரயிலின் எண்கள் மாற்றம்
திருநெல்வேலி, டிச. 15- அனந்தபுரி எக்ஸ்பிரஸ் உள்பட தென் மாவட்ட ரயில்களின் எண்கள் மாற்றம், தஞ்சா வூர் வழியாக இயக்கப்படும் ராமேஸ்வரம் விரைவு ரயில் மற்றும் அனந்த புரி விரைவு ரயில் ஆகிய தென்மாவட்ட ரயில்களின் எண்கள் வரும் ஜனவரி 6 முதல் மாற்றம் செய்யப்பட உள்ளது. சென்னை எழும்பூர் -ராமேஸ்வரம் விரைவு ரயில் (16851) மற்றும் ராமேஸ்வரம் - சென்னை எழும்பூர் விரைவு ரயில் (16852) ஆகியவற்றின் ரயில் எண்கள் முறையே 16751 மற் றும் 16752 என மாற்றம் செய் யப்படுகின்றன. சென்னை எழும்பூர் 1 கொல்லம் அனந்தபுரி விரைவு ரயில் (16723) மற்றும் கொல்லம் சென்னை எழும்பூர் அனந்த புரி விரைவு ரயில் (16724) ஆகியவற்றின் ரயில் எண் கள் முறையே 16823 மற்றும் 16824 என மாற்றம் செய்யப் பட்டுள்ளன. அனந்தபுரி எக்ஸ்பிரஸ் சென்னையில் இருந்து நெல்லை, திருவனந் தபுரம் வழியே கொல்லம் செல்கிறது. எனவே தென் மாவட்ட பயணிகள் மாற் றப்பட்டுள்ள இரு ரயில்க ளின் எண்களையும் அடுத்த மாதம் முதல் கவனத்தில் கொண்டு செயல்படுமாறு தெற்கு ரயில்வே அறிவுறுத் தியுள்ளது.
தூத்துக்குடி மாநகராட்சிப் பகுதிகளில் 20ஆம் தேதி குடிநீர் விநியோகம் ரத்து!
தூத்துக்குடி,டிச.15 தூத்துக்குடி மாநக ராட்சிப் பகுதிகளில் வருகிற 20ஆம் தேதி (செவ்வாய்க் கிழமை) குடிநீர் விநியோ கம் இருக்காது என அறி விக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாநகராட்சி க்கு குடிநீர் விநியோகம் செய்யப்படும் கலியாவூர் தலைமை நீரேற்று நிலை யத்தில் கீழ வல்லநாடு குடிநீர் சுத்திகரிப்பு நிலைய பகுதிக்கு வரும் மின்சார பாதையான கொம்பு கார நத்தம் துணை மின் நிலை யத்தில் மாதாந்திர பராம ரிப்பு பணிகள் மேற்கொள் ளப்பட இருப்பதால் வரு கின்ற 20ஆம் தேதி செவ்வாய் க்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை தூத்துக்குடி மாநகரப் பகுதி களில் குடிநீர் விநியோகம் இருக்காது என்ற விபரம் தெரிவிக்கப்படுகிறது. எனவே பொதுமக்கள் குடி நீரை சிக்கனமாக பயன் படுத்துமாறு மாநகராட்சி ஆணையர் சாருஸ்ரீ வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.
பைக் விபத்தில் ஒருவர் பலி
தூத்துக்குடி, டிச. 15 தூத்துக்குடியில் பைக் விபத்தில் படுகாயம் அடைந்த தனியார் நிறுவன ஊழியர், சிகிச்சை பல னின்றி பரிதாபமாக உயிரி ழந்தார். தூத்துக்குடி அண்ணா நகர் 3-வது தெருவை சேர்ந்த வர் அய்யப்பன் (31). தனி யார் நிறுவன ஊழியர். இவர் புதன்இரவு நெல்லையில் இருந்து தூத்துக்குடி நோக்கி மோட்டார் பைக்கில் வந்து கொண்டிருந்தார். அப்போது புதுக்கோட்டை அருகே பைக் நிலைதடுமாறி விபத் துக்குள்ளானது. இதில் பலத்த காயம் அடைந்த அய்யப்பன், தூத்துக்குடி அரசு மருத்துவ மனையில் அனுமதிக்கப் பட்டார். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் பரிதாப மாக உயிரிழந்தார். இது தொடர்பாக புதுக்கோட்டை காவல் ஆய்வாளர் வின் சென்ட் அன்பரசி வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.
வேலைவாய்ப்பு முகாம்
திருநெல்வேலி, டிச.-15 நெல்லை மாவட்ட வேலைவாய்ப்பு – தொழில் நெறி வழிகாட்டும் மைய அலு வலகத்தில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் வரும் வெள்ளிக்கிழமை (டிச.16) நடைபெறு கிறது. இதில் பங்கேற்க விருப்பமுள்ளவர்கள் தங்க ளது கல்விச் சான்று மற்றும் இதர சான்றுகளுடன் பங் கேற்கலாம். வேலைநாடு நர்களும், வேலை அளிக்க வுள்ள தனியார் நிறுவனங்க ளும் www.tnpriv atejobs. tn.gov.in என்ற இணைய தளத்தில் தங்களது விவரங் களை பதிவு செய்ய வேண் டும். வேலைவாய்ப்பு முகாம் தொடர் பான விவரங்களை அறிய நெல்லை எம்ப்ளாய் மென்ட் ஆபிஸ் என்ற டெலி கிராம் சேனல் மூலம் இணை ந்து பயன்பெறலாம். தனி யார் துறையில் வேலை வாய்ப்பைப் பெற்றாலும் அரசு வேலைக் கான பதிவு மூப்பு ரத்து செய்யப்படாது.போட்டித் தேர்வுக்கு தயா ராகும் மாணவர்கள் வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையின் www.tamilnadu careerservi ces.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்து போட்டித் தேர்வுக ளுக்கான பாடக்குறிப்பு களை இலவசமாக பதிவு செய்து கொள்ளலாம் என மாவட்ட வேலைவாய்ப்பு - தொழில்நெறி வழி காட்டும் மைய உதவி இயக்குநர் தெரிவித்துள்ளார்.
பாரதியார் பிறந்தநாளையொட்டி மாணவ-மாணவிகளுக்கு போட்டிகள்
திருநெல்வேலி, டிச. 15- மகாவி பாரதியார் பிறந்தநாளையொட்டி பள்ளி மற்றும் கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு பல்வேறு போட்டிகள் நெல்லை அரசு அருங்காட்சியகத்தில் வருகிற 18-ந் தேதி நடைபெறுகிறது. பல்வேறு பிரிவின் கீழ் நடைபெறும் போட்டியில் ஆர்வமுள்ள மாணவ-மாணவிகள் கலந்து கொள்ளலாம். 1 முதல் 5 -ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பாரதியார் பாடல்கள் ஒப்புவித்தல் போட்டியும், 6-ம் வகுப்பு முதல் பிளஸ்-2 வரையிலான மாணவர்களுக்கு பாரதியார் ஓவியப்போட்டியும் நடைபெறுகிறது. இதேப்போல் கல்லூரி மாணவர்களுக்கு சரித்திர தேர்ச்சி கொள் என்ற தலைப்பில் கவிதைப்போட்டி நடத்தப்படுகிறது. போட்டிகள் 18-ந் தேதி காலை 10 மணிக்கு தொடங்கப்படுகிறது. அன்று காலை 9.30 மணிக்குள் போட்டியில் கலந்து கொள்ளும் மாணவ-மாணவிகள் தங்களது பெயர்களை முன்பதிவு செய்து கொள்ள வேண்டும். போட்டியில் ஓவியங்கள் வரைவதற்கான பேப்பர்கள் வழங்கப்படும். ஆனால் எழுது பொருட்களும், தேர்வு எழுத தேவையான அட்டை யும் மாணவர்கள் கொண்டு வரவேண்டும். போட்டி யில் வெற்றி பெறுபவர்ளுக்கு பரிசுகள் வழங்கப்படும். மேலும் கலந்து கொண்ட அனை வருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்படும் . இத்தகவலை நெல்லை அருங்காட்சிய காப்பாட்சியர் சிவசக்திய வள்ளி தெரிவித்துள்ளார்.
விக்கிரமசிங்கபுரத்தில் ஊரக வளர்ச்சி உள்ளாட்சித் துறை ஊழியர் சங்கம் கூட்டம்
திருநெல்வேலி, டிச .15- நெல்லை மாவட்ட ஊரக வளர்ச்சி உள்ளாட்சித் துறை ஊழியர் சங்கம் விக்கிரமசிங்கபுரம் நகராட்சி தொழிலாளர்கள் கூட்டம் வியாழக்கிழமை வி.கே.புரம் சிஐடியு அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஜெயகிருஷ்ணம்மாள் தலைமை தாங்கினார். சிஐடியு மாவட்ட செயலாளர் ஆர்.முருகன்,நிர்வாகி சுடலையாண்டி ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர். கூட்டத்தில் வருகின்ற டிசம்பர் 20ல் நடைபெறும் சங்கத்தின் ஆண்டு பேரவையில் அனைத்து தொழிலாளர்களும் பங்கேற்க செய்வது, கூட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டார்கள். நிறைவாக கூட்ட தலைவர் ஜெயகிருஷ்ணம்மாள் நன்றி கூறினார்.
காசநோய் கணக்கெடுப்பு பணி
கரூர், டிச.15- தேசிய காசநோய் ஒழிப்பு திட்டம் கரூர் மாவட்டம் சார்பில் கடவூர் ஊராட்சி ஒன்றியம் முள்ளிப்பாடி ஊராட்சி யில் காசநோய் கணக்கெடுப்பு பணி நடைபெற்றது. செட்டியபட்டியில் நடைபெற்ற விழாவிற்கு பள்ளி தலைமை ஆசிரியர் ராபர்ட் தலைமை வகித்தார். முள்ளிப்பாடி ஊராட்சி மன்றத் தலைவர் நீலாவேல்முரு கன் தொடங்கி வைத்தார். காசநோய் சிகிச்சை மேற்பார்வை யாளர் டி.மதன் காசநோய் பரவும் வழிமுறைகள், பாதுப்பு குறித்து பேசினார். சுகாதார ஆய்வாளர் முத்துராமன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். இரண்டு தன்னார்வளர்கள் முள்ளிப்பாடி ஊராட்சி யில் உள்ள அனைத்து கிராமங்களிலும் காசநோய்குறித்த கணக்கெடுப்பு பணியை தொடங்கப்பட்டுள்ளது. இந்த கணக்கெடுப்பு பணிகள் 20 நாட்கள் நடைபெற உள்ளது.
விமான நிலையத்தில் வேலை: இளைஞரிடம் ரூ.1.84 லட்சம் மோசடி
தஞ்சாவூர், டிச.15- தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் பகுதியைச் சேர்ந்த 21 வயது பட்டதாரி இளைஞர் வேலை தேடி வந்துள் ளார். இதனிடையே, சமூக வலைதளத்தில் ஒரு பெண்ணின் தொடர்பு கிடைத்தது. அப்போது, அப்பெண்ணிடம் வேலை தேடிக் கொண்டிருப்பதாக இளைஞர் தெரிவித்துள்ளார். அப்பெண், பெங்களூரு விமான நிலையத்தில் வேலை பார்த்து வருவதாகவும், பணம் கொடுத்து தான் வேலை யில் சேர்ந்ததாகவும், உங்களுக்கும் வேலை வேண்டுமா னால் பணம் கொடுத்தால் வாங்கி விடலாம் என தெரி வித்துள்ளார். இதை நம்பிய இளைஞர், அப்பெண் அளித்த வங்கிக் கணக்கிற்கு ரூ.1.84 லட்சத்தை அனுப்பியுள்ளார். இதை யடுத்து, இளைஞருக்கு விமான நிலையத்தில் சேரு வதற்கான போலி நியமனக் கடிதம் மின்னஞ்சலில் வந்தது. கடிதத்துடன் இளைஞர் பெங்களூரு விமான நிலை யத்துக்குச் சென்றபோது, அது போலியானது என்பது தெரியவந்தது. தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த இளைஞர் தஞ்சாவூர் இணையதளக் குற்றப் பிரிவில் புகார் செய்தார். இதன் பேரில் காவல் துறையினர் வழக்குப் பதிந்து விசாரணைமேற்கொண்டுள்ளனர்.
குஜராத் குழந்தைகள் அறிவியல் மாநாட்டில் நத்தம் ராம்சன் பள்ளி விஞ்ஞானிகள் பங்கேற்பு
திண்டுக்கல், டிச.15- குஜராத் மாநிலத்தில் ஜனவரி 27 அன்று நடைபெறும் அகில இந்திய அளவிலான குழந்தைகள் அறிவியல் மாநாட்டில் திண்டுக்கல் மாவட்டம் நத்தம் ராம்சன் பள்ளியைச் சேர்ந்த 15 குழந்தை விஞ்ஞானிகள் பங்கேற்க உள்ளனர். திண்டுக்கல் அச்யுதா பப்ளிக் பள்ளியில் நடைபெற்ற மாவட்ட அளவிலான 30வது குழந்தைகள் அறிவியல் மாநாட்டில் பங்கேற்ற குழந்தை விஞ்ஞானிகள் 159 பேர் தங்கள் கண்டுபிடிப்புகளை அறிக்கைகளாக சமர்ப்பித்தனர். இதில் 15 குழந்தை விஞ்ஞானிகளின் அறிக்கைகள் தேர்ந்தெடுக்கப்பட்டன. இந்த குழந்தைகள் தூத்துக்குடியில் கடந்த டிசம்பர் 10 மற்றும் 11 தேதிகளில் நடைபெற்ற மாநில அளவிலான மாநாட்டில் தங்கள் அறிக்கைகளை சமர்ப பித்தனர். இந்தமாநாட்டில் அனைத்து மாவட்டங்களிலும் இருந்து 528 குழந்தை விஞ்ஞானிகள் பங்கேற்றனர். இதில் 30 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இந்த 30 விஞ்ஞானிகள் ஜனவரி 27 ஆம் தேதி குஜராம் மாநிலம் அகமதாபாத்தில் நடை பெறும் அகில இந்திய மாநாட்டில் பங்கேற்று தங்கள் ஆய்வுகளை சமர்ப்பிக்க உள்ளனர். இந்த மாநாட்டில் நத்தம் பகுதியைச் சேர்ந்த ராம்சன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி யை சேர்ந்த மாணவர்களின் ஆய்வு தேர்ந்தெடுக்கப்பட்டு அந்த குழந்தை விஞ்ஞானி கள் மாநாட்டில் பங்கேற்க உள்ளனர். இப்பள்ளி மாணவர்களுக்கு தமிழ்நாடு அறிவியல் இயக்கம் திண்டுக்கல் மாவட்டக்குழு சார்பாக வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டுள் ளது. குழந்தை விஞ்ஞானிகள் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் வளர்மதி, சங்கத்தின் மாவட்ட தலைவர் இராசு, கல்வி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ரவீந்திரன், சார்பாக சிறப்பாக மாணவர்களை வழிநடத்திய பள்ளி நிர்வாகத்திற்கு வாழ்த்துக்கள் தெரி விக்கப்பட்டுள்ளது. (நநி)
பழனி தாதநாயக்கன்பட்டியில் வெடிமருந்து தொழிற்சாலைக்கு கிராம மக்கள் எதிர்ப்பு
திண்டுக்கல், டிச.15- பழனி அருகேயுள்ளது வடக்கு தாதநாயக்கன் பட்டி. இந்த ஊரில் 280 ஏக்கர் நிலத்தில் பெங்களூரு வில் உள்ள ஒரு தனியார் நிறுவனம் வெடிமருந்து தொழிற்சாலை அமைக்க உள்ளது. இதற்காக விவசாய விளை நிலங்களை இந்நிறுவனம் கையகப்படுத்தி வரு கிறது. இதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித் துள்ளனர். இந்த பகுதியில் வரலாற்றுச் சிறப்பு மிக்க சம ணர் பள்ளி உள்ள ஐவர் மலை உள்ளது. இப்பகுதி தொல்லியல் கட்டுப்பாட்டில் உள்ளது. ஆனால் இந்த வெடிமருந்து தொழிற்சாலை அமைந்தால் 10 கி.மீ சுற்றளவில் பாதிப்பு இருக்கும் என அறிவியலாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இந்நிலையில் இந்த பிரச்சனை தொடர்பாக திண்டுக்கல் ஆட்சியர் தலை மையிலான கருத்து கேட்புக் கூட்டம் வியாழனன்று நடத்தப்பட உள்ளது. ஆனால் கருத்துக்கேட்பு கூட்டம் குறித்து மக்களுக்கு எந்த தகவலும் கிடைக்கவில்லை என்றும் கூறப்படுகிறது. எனவே இந்த கருத்துக்கேட்புக் கூட்டம் முறையாக நடைபெற வேண்டும். அப்படி நடை பெற்றால் அந்த மக்களுடைய கருத்துக்கு அரசு செவி கொடுத்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப் பகுதி மக்கள் கோருகிறார்கள். (நநி)
சுருளி அருவியில் வெள்ளப்பெருக்கு சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
தேனி, டிச.15- மேகமலை பகுதியில் பெய்து வரும் கனமழை காரணமாக சுருளி அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் சுற்றுலா பயணிகள் குளிக்க வனத்துறையினர் தடை விதித்துள்ளனர் . தேனி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மழை சற்று குறைந்திருந்த நிலையில் செவ்வாயன்று மீண்டும் அதிகரிக்க தொடங்கியது. குறிப்பாக கூடலூர், உத்தமபாளையம், போடி, ஆண்டிபட்டி உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்தது. வைகை அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்ததால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. போடி சுற்றுவட்டார பகுதியில் பெய்த கனமழை காரணமாக கொட்டக்குடி ஆற்றில் தண்ணீர் அதிகரித்து செல்கிறது. சுருளி அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் அங்கு சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த சில தினங்களாக அருவியில் சீரான தண்ணீர் வரத்து இருந்ததால் சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்கள் இங்கு நீராடி சென்றனர். தற்போது வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் வனத்துறை சார்பில் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் அருவியில் நீராட வந்த பக்தர்கள் ஏமாற்றமடைந்தனர். கடமலை, மயிலாடும்பாறை ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்ததால் மின்வினியோகம் நிறுத்தப்பட்டது. மழையளவு பெரியாறு -3.6, தேக்கடி 2.8, கூடலூர் 3.8, சண்முகா நதி 16, உத்தமபாளையம் 4.8, போடி 19.6, வைகை அணை 1.2, வீரபாண்டி 2.4, அரண்மனை புதூர் 1, ஆண்டிபட்டி 13.2 மி.மீ மழையளவு பதிவானது.
முல்லை பெரியாறு அணை 141 அடியை எட்டியது கேரளாவிற்கு 2 ஆம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை
தேனி, டிச.15- நீர்ப்பிடிப்பு பகுதியில் பெய்து வரும் மழை காரணமாக முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 141அடியாக உயர்ந்தது .இதனைத் தொடர்ந்து தமி ழக நீர்வளத்துறை சார்பில் கேரள கரை யோரம் வசிக்கும் மக்களுக்கு இரண்டாம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக் கப்பட்டுள்ளது. முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் கடந்த மாதம் 136.5அடியாக இருந் தது. இந்நிலையில் வடகிழக்குப் பருவ மழையின் தாக்கத்தால் அணைக்கு நீர் வரத்து அதிகரித்து கடந்த 3 ஆம் தேதி 140அடியை எட்டியது. இதனைத் தொடர்ந்து கேரளாவுக்கு முதற்கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது. அதன் பின்பு மழையின் தீவிரம் குறைந்தாலும் அவ்வப்போது பெய்த சாரல் மழையி னால் சீரான நீர்வரத்து இருந்தது. இந்நிலை யில் புதன்கிழமை காலை 6 மணிக்கு அணை யின் நீர்மட்டம் 141அடியை எட்டியது. இதனைத் தொடர்ந்து இரண்டாம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை அறிவிக்கப் பட்டுள்ளது. இதுகுறித்து தமிழக நீர்ப்பாசனத்துறை அதிகாரிகள் கூறுகையில், தமிழகப்பகு திக்கு 4 ராட்சத குழாய்கள் வழியே விநா டிக்கு ஆயிரத்து 600 கனஅடியும், இரைச் சல்பாலம் வழியே ஆயிரம் கனஅடி என அதிகபட்சம் 2 ஆயிரத்து 600கனஅடிநீர் திறக்க முடியும். அவசர தருணங்களில் அதிகபட்ச தண்ணீர் கேரளப்பகுதி வழி யேதான் திறக்க முடியும் என்பதால் இந்த அறிவிப்புகள் வெளியிடப்படுகின்றன. கேரளாவில் உள்ள வல்லக்கடவு, சப்பாத்து உள்ளிட்ட கரையோர பகுதி மக்க ளுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை இடுக்கி மாவட்டம் செய்து வருகிறது என்று தெரி வித்தனர்.