திண்டுக்கல், ஜூலை 1- திண்டுக்கல் மாவட்டத்தில் செயல்படும் வங்கிகளின் மாற்றுத் திறனாளி விரோதப் போக்கைக் கண்டித்து தமிழநாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற் றும் பாதுகாப்போர் உரிமைகளுக் கான சங்கம் சார்பாக வெள்ளி யன்று 16 மையங்களில் ஆர்ப்பாட் டங்கள் நடைபெற்றன. மாற்றுத்திறனாளிகளின் வாழ் வாதார தேவைகளுக்காக வங்கி களுக்கு வருகை தரும் போது பல வகைகளில் துன்புறுத்தப்படு கிறார்கள். குறிப்பாக திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து வங்கிகளிலும் கைப்பிடியுடன் கூடிய சாய்வுதளம் அமைத்து கொடுக்கவில்லை. வரிசையில் நிற் காமல் முன்னுரிமையில் செல்ல அனுமதிப்பதில்லை. மாற்றுத்திற னாளிகள் சுய தொழில் செய்து பிழைப்பதற்கு வங்கிக்கடன் கேட்டுச்சென்றால் பல்வேறு ஆவ ணங்களை எடுத்து வரச்சொல்லி அலைய வைப்பதும், பின்னர் வங் கிக்கடன் வழங்காமல் நிராகரிக் கப்படுவதும் வாடிக்கையாக நடை பெற்று வருகிறது. இது தொடர்பாக பல முறை வங்கி அதிகாரிகளிடம் முறையிட்டும் எந்த பலனும் கிடைக்கவில்லை. வங்கிகளின் மாற்றுத்திறனாளி விரோதப் போக்கைக் கண்டித்து பழனியில் நடைபெற்ற ஆர்ப்பாட் டத்திற்கு மாவட்டச்செயலாளர் பகத்சிங் தலைமை வகித்தார். நகரத்தலைவர் காளீஸ்வரி, செய லாளர் தங்கவேல், பொருளாளர் அய்யனார் ஆகியோர் பேசினர்.
பழனி ஒன்றிய பொருளாளர் பாலக்குமார் தலைமையில் நெய்க்காரப்பட்டியிலும், பழனி ஒன்றிய செயலாளர் கண்ணுச்சாமி தலைமையில் புது ஆயக்குடியி லும், மாவட்ட பொருளாளர் காளீஸ்வரி தலைமையில் கள்ளி மந்தையத்திலும், ஒட்டன்சத்திரம் ஒன்றிய செயலாளர் சிவக்குமார் தலைமையில் ஓட்டன்சத்திரத்தி லும், ரெட்டியார்சத்திரம் ஒன்றிய தலைவர் கோபிநாதன் தலைமை யில் கன்னிவாடியிலும் ஆர்ப்பாட் டங்கள் நடைபெற்றன. வடமதுரை ஒன்றிய செயலா ளர் முத்துப்பாண்டி தலைமையில் வடமதுரையிலும், வடமதுரை ஒன்றிய தலைவர் சரவணக்குமார் தலைமையில் அய்யலூரியிலும், திண்டுக்கல் ஒன்றிய செயலா ளர் ஜோசப் ஸ்டாலின் தலைமை யில் திண்டுக்கல்லிலும் ஆர்ப் பாட்டங்கள் நடத்தப்பட்டன. சாணார்பட்டி ஒன்றிய தலை வர் முருகன் தலைமையில் சாணார் பட்டியிலும், சாணார்பட்டி ஒன்றிய செயலாளர் கருப்புச்சாமி தலைமை யில் கம்பிளியம்பட்டியிலும், நத்தம் ஒன்றிய பொறுப்பாளர் பால்ராஜ் தலைமையில் செந்துரையிலும், நிலக்கோட்டை ஒன்றிய செய லாளர் சசிகுமார் தலைமையில் கொடைரோட்டிலும், ஆத்தூர் ஒன்றிய பொருளாளர் ஆறுமுக வள்ளி தலைமையில் சின்னாள பட்டியிலும், ஆத்தூர் ஒன்றிய செய லாளர் மலைச்சாமி தலைமையில் சித்தரேவிலும், வத்தலக்குண்டு ஒன்றிய பொறுப்பாளர் தங்க மணி தலைமையில் வத்தலக் குண்டுவிலும் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. திண்டுக்கல் மற்றும் நத் தத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத் தில் சங்கத்தின் மாவட்ட தலைவர் ஜெயந்தி கண்டன உரையாற்றி னார். மாவட்டம் முழுவதும் நடை பெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாற்றுத் திறனாளிகள் பங்கேற்றனர்.