நீலகிரி,ஜன.16- கொரோனா பரவலை பொறுத்தவரை அதை கட்டுப்படுத்துவதற்கு இருக்கும் மிக முக்கியமான அம்சமாக தடுப்பூசி மட்டுமே உள்ளது. முகக் கவசம் அணிவது, சமூக இடைவெளியை கடைப்பிடிப்பது போன்ற வைகள் மூலமாகவும் கொரோனாவை தடுக்கலாம். என்றாலும், தடுப்பூசி மட்டுமே முக்கிய ஆயுதமாக உள்ளது. தமிழகத்தில் ஒரு தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள் பட்டியலில் காஞ்சிபுரம் முதலிடத்தில் உள்ளது. அரியலூர், கடலூர், கோவை , விழுப்புரம் மாவட் ்டங்கள் அடுத்தடுத்த நிலையில் உள்ளன. 2 தவணை தடுப்பூசி செலுத்தியவர்களில் நீலகிரி மாவட்ட மக்கள் முதலிடத்தில் இருக்கிறார்கள். அந்த மாவட்டத்தில் 85.65 விழுக்காட்டினர் 2 தவணை தடுப்பூசி செலுத்தியி ருக்கிறார்கள். கோவை மாவட்டத்தில் 81.69 விழுக்காட்டினர் தடுப்பூசி செலுத்தி 2-வது இடத்தில் இருக்கிறார்கள். காஞ்சிபுரம் மாவட்ட மக்களில் 78.72 விழுக்காட்டினர் 2 தவணை தடுப்பூசி செலுத்தியிருக்கிறார்கள். ராமநாதபுரம் மாவட்டத்தில் 76.06 விழுக்காடும், அரியலூர் 74.34 விழுக்காடும் 2 தவணை தடுப்பூசி போடப்பட்டுள்ளது.