districts

img

மலையோர கிராமங்களிலிருந்து அதிக பேருந்துகள் இயக்க வேண்டும்

மாணவர் மாநாடு கோரிக்கை    அருமனை, ஜூலை 17 கன்னியாகுமரி மாவட்டம் அருமனை யில் இந்திய மாணவர் சங்கத்தின்  வட்டார  அமைப்பு மாநாடு நடைபெற்றது. இம்  மாநாட்டிற்கு அபின் தலைமை தாங்கி னார். கியூனா வரவேற்று பேசினார்.இம்  மாநாட்டில் இந்திய மாணவர் சங்க குமரி மாவட்ட செயலாளர் அர்ஷாத், துணைச் செயலாளர் முஃபீஸ் .திருவனந்தபுரம் மாவட்ட மாணவர் சங்க முன்னாள் செயலா ளர் ராகுல் ஆகியோர் உரையாற்றினார்கள்.   தலைவராக ராகுல் ராஜ், செயலா ளராக கோபீஷ், துணைத் தலைவராக கியூனா, துணை செயலாளராக குயிலி உட்பட எட்டு பேர் கொண்ட குழு தேர்வு  செய்யப்பட்டது.  தனியார் கல்வி நிறுவ னங்களில் கட்டண கொள்ளைக்கு தமிழக அரசு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும், கல்வி நிலையங்களில் மாணவிகளுக்கு ஏற்படுகின்ற பாலியல் தொல்லைகளுக்கு கல்வித்துறை  நடவடிக்கை எடுத்து சம்பந் தப்பட்டவர்களுக்கு கடுமையான தண் டனை வழங்க வேண்டும்.பள்ளி கல்லூரி நேரங்களில் மலையோர கிராமங்களில் இருந்து அதிகப்படியான பேருந்துகள் இயக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங் கள் நிறைவேற்றப்பட்டன.