districts

img

பொதுசிவில் சட்டம், மணிப்பூர் சம்பவத்திற்கு சிறுபான்மை நலக்குழு கண்டனம்

மதுரை, ஜூலை 31- பொதுசிவில் சட்டத்திற்குத் தமிழ்நாடு சிறு பான்மை நலக்குழு கடும் எதிர்ப்புத் தெரிவித் துள்ளது. பல்வேறு மொழி, இனம், மதம், கலாச்சா ரம், பண்பாடு, வாழ்க்கை முறையைக் கொண்ட  சிறுபான்மை மக்கள் மத்தியில் பொதுச் சிவில் சட்டத்தைத் திணிக்க நினைப்பதை ஒன்றிய அரசு  கைவிட வேண்டும், மணிப்பூரில் ஒன்றிய-மாநில  பாஜக அரசு சாதி, இனம், மதம் ரீதியாகப் பிரித்தா ளும் சூழ்ச்சியை மேற்கொண்டு மாநிலத்தையே  கலவரக் காடாக மாற்றிய மணிப்பூர் மாநில முதல்வர் பதவி விலக வேண்டுமென வலி யுறுத்தி தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு சார்பில் மதுரை புதூர் பேருந்து நிலையத்தில் பிரச்சாரம் நடைபெற்றது. அமைப்பின் மாவட்டத் துணைத் தலைவர் எஸ்.எம்.லூர்து தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் மாவட்டக்குழு உறுப்பினர் டி.கல்யா ணசுந்தரம், மாவட்டத் தலைவர் கே.அலாவு தீன், அருட்தந்தையர்கள் லாரன்ஸ், ஜே. பெனடிக் பர்ணபாஸ், மதிமுக ஒழுங்கு நட வடிக்கை குழு உறுப்பினர் மகபூப்ஜான், இந்திய  யூனியன் முஸ்லிம் லீக் மண்டலப் பொறுப்பாளர்  எம். அவ்தா காதர், மாமன்ற உறுப்பினர் அந்தோ ணியம்மாள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் மாநிலக்குழு உறுப்பினர் இரா.விஜய ராஜன் தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு மாவட்டச் செயலாளர் என். கணேசமூர்த்தி, டி.வி.சந்திரசேகர், மாவட்டக்குழு உறுப்பினர் ஜான் சேவியர் ஆகியோர் பேசினர்.

வாலிபர் சங்கம்

மணிப்பூரில் நடைபெறும் வன்முறையைத் தடுக்கவேண்டும். மாநில பாஜக அரசு பதவி  விலக வேண்டுமென வலியுறுத்தி மதுரை அவனி யாபுரத்தில் அனைத்து அரசியல் கட்சிகள் பங்கேற்ற பொதுக்கூட்டம் கே.மருதுபாண்டி தலைமையில் நடைபெற்றது. பொதுக் கூட்டத்தின் நோக்கங்களை விளக்கி வாலிபர் சங்க மாநிலத் தலைவர் எஸ்.கார்த்திக், மாவட்டத்  தலைவர் வி.கருப்பசாமி, மாவட்டச் செயலாளர் பி.தமிழரசன், மாவட்டப் பொருளாளர் எஸ். பாலகிருஷ்ணன், மாவட்டத் துணைச் செய லாளர் திருதரன், பிரசன்னா. மாவட்டக் குழு  உறுப்பினர் எஸ்.பாலா, மாதர் சங்க மாநிலச் செயலாளர் எஸ்.கே.பொன்னுத்தாய். மாவட்ட இளம்பெண்கள் கன்வீனர் ஆர்.ஜென்னி, ராஜேஷ் (திமுக), கஜேந்திரன் (காங்கிரஸ்) மாமன்ற உறுப்பினர் இன்குலாப் (விசிக), ஆசை தம்பி, சிவகுமார் (மக்கள் நீதி மய்யம்), வீரா. செல்வம் (ஆதித் தமிழர் பேரவை) ஆகியோர் பேசினர்.

பழனி

மணிப்பூரில் பாலியல் வன்கொடுமை மற்றும்  பழங்குடி மக்கள் நடைபெற்ற தாக்குதலுக்கு தார்மீகப் பொறுப்பேற்று மணிப்பூர் அரசை ஒன்றிய பாஜக அரசு கலைக்க வலியுறுத்தி ஆயக்குடியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி  சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட் டத்தில் மூத்த தோழர் பி.கே.கருப்புசாமி, ஒன்றி யச்செயலாளர் பி.செல்வராஜ், மாவட்டச்செயற் குழு உறுப்பினர் எஸ்.கமலக்கண்ணன், பி. சின்னச்சாமி, சி.பெரியசாமி, எம்.முருகசாமி, ஆர்.கல்பனா உட்பட பலர் பங்கேற்றனர்.

வத்திராயிருப்பு

விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே உள்ள தம்பிபட்டியில் அனைத்துக்  கட்சிகள் சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத் திற்கு எஸ்டிபிஐ நிர்வாகி அஹமது காசிம்  தலைமை வகித்தார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டக்குழு உறுப்பினர் ஜெயக்  குமார், ஒன்றியச் செயலாளர் பெனரி, தமிழ்நாடு விவசாய சங்க ஒன்றியச் செயலாளர் மகேந்தி ரன், சிபிஐ சார்பில் முருகன், காங்கிரஸ் சார்பில்  அண்ணாதுரை, லட்சுமணன், விடுதலைச் சிறுத்தைகள் சார்பில் மாவட்டச் செயலாளர் பிரியதர்ஷினி, ஒன்றியச் செயலாளர் ராஜ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

மதுரை-செல்லம்பட்டி

மதுரை செல்லம்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்டக் குழு உறுப்பினர் பி.எஸ்.முத்துப் பாண்டி தலைமை வகித்தார். மதுரை புறநகர் மாவட்டச் செயலாளர் கே.ராஜேந்திரன், ஒன்றி யச் செயலாளர் வி.பி.முருகன், சிஐடியு ஒன்றியச் செயலாளர் தெய்வம், தமிழ்நாடு விவ சாயிகள் சங்க ஒன்றியச் செயலாளர் டி.ரத்தி னம், அகில இந்திய விவசாயத் தொழிலா ளர்கள் சங்க மாவட்டத் தலைவர் ஜெ.காசி உட்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.

தேனி

தேனியில் பெண்கள் அமைப்பினர் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழ் மாநில  பெண்கள் இயக்கத் தலைவர் பி.சரிதா தலைமை வகித்தார் . பொருளாளர் எம்.பிரபா,  தேனி நிர்வாகி தமிழ்ச்செல்வி, திண்டுக்கல் தொகுதி சட்டமன்ற முன்னாள் உறுப்பினர் கே.பாலபாரதி, மாதர் சங்க மாவட்டத் துணைத் தலைவர் சு.வெண்மணி, தேன்சுடர் பெண்கள் இயக்க ஆலோசகர்கள் வி.கருத்தம்மாள், ஜி. லட்சமி, மலர்ச்சி பெண்கள் கூட்டமைப்பு நிர்வாகி  பி.வேளாங்கண்ணி, எழுச்சி பெண்கள் கூட்ட மைப்பு நிர்வாகி எம்.பழனியம்மாள் உட்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.