districts

மதுரை மாவட்டத்தில் 15 புதிய சுகாதார மைய கட்டடங்களை அமைச்சர்கள் திறந்து வைத்தனர்

மதுரை,ஜூன் 23- மதுரை அரசு இராசாசி மருத்துவமனை வளாகத் தில் ரூ.20 கோடி மதிப்பீட்டில் ஒருங்கிணைந்த குழந்தை கள் நல ஒப்புயர்வு மையத் திற்கான கட்டுமானப் பணி களையும், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் ரூ.6.34 கோடி மதிப்பீட்டில் புதி தாக கட்டப்பட்டுள்ள 15 புதிய சுகாதார மைய கட்டடங்க ளையும் பொதுமக்கள் பயன் பாட்டிற்கு ஜூன் 23 அன்று தமிழக மருத்துவம்-மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச் சர் மா.சுப்பிரமணியன் , வணி கவரி-பதிவுத்துறை அமைச் சர் பி.மூர்த்தி ஆகியோர் தொடங்கி வைத்தனர்.  இவ்விழாவில் அமைச் சர் மா.சுப்பிரமணியன் பேசு கையில், ஒருங்கிணைந்த குழந்தைகள் நல ஒப்பு யர்வு மையம் 56,685 சதுர அடி பரப்பளவில் தரை தளத்துடன் 2 மாடிகள் என 100 படுக்கை வசதிகளுடன் கூடிய கட்டடமாக அமைய உள்ளது. இக்கட்டுமானப் பணி களை 1 வருட காலத்திற்குள் பயன்பாட்டிற்கு கொண்டு வர அலுவலர்களுக்கு அறி வுறுத்தப்பட்டுள்ளது. மதுரை அரசு இராசாசி மருத்துவ மனை வளாகத்தில் ஜப் பான் பன்னாட்டு கூட்டுறவு முகமை நிதி பங்களிப்புடன் ரூ.155.65 கோடி மதிப் பீட்டில் டவர் பிளாக் கட்ட டத்திற்கான கட்டுமானப் பணிகள் நடைபெற்று வரு கின்றன. இப்பணிகள் இன் னும் 2 மாத காலத்திற்குள் முழு மையாக நிறைவேற்றப்படும்.

திருமங்கலம் பகுதியில் செயல்பட்டு வந்த மதுரை அரசு ஹோமியோபதி மருத் துவக் கல்லூரி மருத்துவ மனை தற்போது உள்ள இடம் மழைக்காலங்களில் தண் ணீர் சூழ்ந்து கட்டடங்கள்  இயங்க முடியாத கார ணத்தால் தோப்பூர் பகுதி யில் மாற்று இடம் தேர்வு செய்வதற்காக ஆய்வு மேற் கொள்ளப்பட்டது. இப்பகுதி யில் 5 ஏக்கர் பரப்பளவில் இடம் தேர்வு செய்யப்பட் டுள்ளது. முதலமைச்சரின்  ஒப்புதலோடு நிதி ஆதாரம் பெறப்பட்டு விரைவில் கட்டு மானப் பணிகள் தொடங்கும். பொதுமக்களிடையே நடை பயிற்சி பழக்கத்தை ஊக்குவித்திடும் நோக்கில் தமிழ்நாட்டில் உள்ள 38 மாவட்டங்களிலும் “நடப் போம் நலம் பெறுவோம் - HEALTH WALK“ என்ற திட்டம் செயல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இத் திட்டத்திற்கு செயல் வடிவம் கொடுக்கும் விதமாக  மதுரை ரேஸ்கோர்ஸ் பகுதி யிலிருந்து பொதுமக்கள் 8 கி.மீ நடைபயிற்சி மேற் கொள்வதற்கான நடைபாதை தேர்வு செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்தார். இந்த நிகழ்வில் மாவட்ட ஆட்சித் தலைவர் மா.சௌ.சங்கீதா, மேயர்  இந்திராணி பொன்வசந்த், மதுரை நாடா ளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன், மாநகராட்சி ஆணையாளர் கே.ஜே.பிரவீன் குமார், சட்டமன்ற உறுப்பி னர்கள் கோ.தளபதி (மதுரை வடக்கு), மு.பூமிநாதன் (மதுரை தெற்கு), ஆ.வெங்க டேசன்  (சோழவந்தான்), இராசாசி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் இரத்தினவேல்  தலைமைப் பொறியாளர் மதுரை மண்டலம் எஸ்.ரகு நாதன், மாவட்ட ஊராட்சி தலைவர் சூரியகலா கலா நிதி,  துணை மேயர் தி.நாக ராஜன் உட்பட அரசு அலு வலர்கள் பலர்  கலந்து கொண்டனர்.