districts

img

விபத்தில் சிக்கியவருக்கு உதவிய அமைச்சர்

சின்னாளபட்டி, ஜுன் 11- தமிழக ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரிய சாமி ஞாயிறன்று திமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்  களின் இல்ல விழாக்கள் மற்றும் மருத்துவ முகாம்களை துவக்கி வைத்துவிட்டு திண்டுக்கல்லில் இருந்து வந்து கொண்டிருந்தார். வீரக்கல் அருகே வந்தபோது திண்டுக்கல் செம்பட்டி சாலையில் ஜெயினி கல்லூரி அருகே வாலிபர் ஒருவர் தடுமாறி கீழே விழுந்து கிடப்பதை  பார்த்தவுடன் உடனடியாக வண்டியை நிறுத்தச் சொன்னார். மதுரையைச் சேர்ந்த வாலிபரை தூக்கி  அவருக்கு முதல் உதவி சிகிச்சை அளிக்க வைத்ததோடு ஆத்தூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தார். உரிய நேரத்தில் உதவிய அமைச்சர் ஐ.பெரிய சாமியை பார்த்து அந்த வாலிபர் கை கூப்பி நன்றி கூறினார்.