சின்னாளப்பட்டி, செப்.2- திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் ஒன்றியம் ஆதிலட்சுமிபுரம் பிரிசம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாண வர்கள், புதுச்சேரியில் நடைபெற்ற உலக அளவிலான துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் கலந்துகொண்டனர். இதில், 11-ம் வகுப்பு மாணவி காவி யாழினி, 9-ம் வகுப்பு மாணவர் காவியன் முதல் பரிசையும், 7-ம் வகுப்பு மாணவர் தர்ஷன் குமார், வில்வித்தையில் 9-ம் வகுப்பு மாணவி கனிஷ்கா சுப்புராஜ் 3-ம் பரிசையும் வென்றனர். ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் இ.பெரியசாமியை வெற்றி பெற்ற வீரர் கள் நேரில் சந்தித்து வாழ்த்துகளை தெரிவித்தார். பள்ளி தாளாளர் சாந்தி, முதல்வர் சத்தியசீலி, மாஸ்டர் தங்கபாண்டியன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.