சிவகங்கை, ஜன.2- சிவகங்கை மாவட்டம் கல்லல் ஊராட்சி ஒன்றியம் கொரட்டி ஊராட்சி யில் அரசு புறம்போக்கு நிலங்களில் மரங் கள் வளர்த்து ஆக்கிரமிப்பை தடுத்த கொரட்டி ஊராட்சி தலைவரை ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் பெரியகருப் பன் பாராட்டினார். கொரட்டி கிராமத்தில் நடைபெற்ற விழாவில் அமைச்சர் பெரியகருப்பன் பேசுகையில், கொரட்டி ஊராட்சி தலை வர் முன்முயற்சியால் அரசாங்க புறம் போக்கு நிலத்தில் பலவகை தோட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. இது ஒரு அரிய சாதனை நிகழ்வாகும். இதனால் அரசு நிலம் பாதுகாக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார். விழாவில் மாவட்ட ஆட்சியர் மது சூதன் ரெட்டி, கல்லல் ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் சொர்ணம் அசோகன், ஆணையாளர் சங்கர பரமேஸ்வரி, வட்டார வளர்ச்சி அலுவலர் அழகு மீனாள் ஆகியோர் கலந்து கொண்டனர் இதேபோன்று தட்டட்டி ஊராட்சியில் பலவகை தோட்டம் அமைக்கப்பட்டு இருக்கிறது. கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டு இருக்கிறது பழத் தோட்ட அருவி விஷப்பாம்பு உருவாக்கப் பட்டிருக்கிறது இவற்றையும் அமைச்சர் பெரியகருப்பன் குறிப்பிட்டு பேசினார்.