மதுரை, ஏப்.10 - தாலிக்கு தங்கம் திட்டத்தை திமுக ஆட்சிக்கு வந்த பிறகு நிறுத்தி விட்டார்கள் என்று பச்சைப் பொய் சொல்வதாக அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் தெரி வித்துள்ளார். மதுரை மக்களவைத் தொகு தியில் ‘இந்தியா’ கூட்டணியின் சார்பில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் வேட்பாளர் சு.வெங்கடேசனை ஆதரித்து மதுரை மத்திய தொகு திக்கு உட்பட்ட தளவாய்புரம், அக்ர ஹாரம், தாளமுத்து பிள்ளை சந்து, செல்லத்தம்மன் கோவில் உள்ளிட்ட பகுதிகளில் தமிழ்நாடு தகவல் தொழில் நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவை கள் துறை அமைச்சர் பி.டி.ஆர்.பழனி வேல் தியாகராஜன் செவ்வாய்க்கிழ மை பிரச்சாரம் மேற்கொண்டார்.
அப்போது, அவர் பேசுகையில், “அதிமுக ஒரு விளம்பரத்தை வெளி யிட்டு பொய்ப் பிரச்சாரத்தை செய்து வருகிறது. அதில் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு தாலிக்கு தங்கம் திட்டத்தை நிறுத்திவிட்டார்கள் என்று பச்சைப் பொய் சொல்கிறார்கள். இதுகுறித்த உண்மையை சட்டமன்றத்திலேயே கூறியிருக்கிறேன். கடந்த அதிமுக ஆட்சியில் நான்கு ஆண்டுகளாக தாலிக்கு தங்கம் திட்டத்தை நிறுத்தி வைத்திருந்தது. அதை அவர்கள் வெளிப்படையாகவும் சொல்லவில்லை. அவர்கள் தாலி யும் வாங்கவில்லை, தங்கமும் வாங்க வில்லை. நிதியும் அதற்காக ஒதுக்க வும் இல்லை.
நாங்கள் ஆட்சிக்கு வந்த பிறகு இந்தத் திட்டத்தை துவக்குவது என்பது முடியாத காரியம். கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன் திரு மணம் முடிந்தவர்களில் இருந்து தற்போது வரை அனைவருக்கும் இந்த திட்டத்தை செயல்படுத்துவது என்பது கடினமான காரியம். எனவே, அதிமுக நிறுத்தி வைத்த திட்டத்தினை மீண்டும் எங்களால் துவக்க வழியில்லை என்பதால், பெண் கல்விக்காக, அவர்கள் ஊக்கத் திற்காக, ஊக்கத்தொகையாக மாதம் ரூ.1000 வழங்கும் ‘புதுமைப் பெண்’ திட்டத்தை செயல்படுத்தினோம்.
பெண்கள் கல்வி பெறுவதற்காகவே இத்தகைய மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் கல்வி உதவித்தொகை திட்டத்தை செயல்படுத்தினோம். தாலிக்கு தங்கம் என்கிற திட்டத்தை விட சிறப்பான திட்டமாக புதுமைப் பெண் கல்வித் தொகை திட்டம் துவக்கப்பட்டது” என்றார்.