மதுரை, ஜன.4- மதுரை மாவட்டம் கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஊமச்சிகுளம்- செட்டிகுளம் கிரா மத்தில் கூட்டுறவுத்துறை சார்பில் செவ்வாயன்று குடும்ப அட்டை தாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பினை வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி. மூர்த்தி, மாவட்ட ஆட்சியர் மரு. எஸ். அனிஸ் சேகர், சோழவந் தான் சட்டமன்ற உறுப்பினர் ஏ. வெங்கடேசன் ஆகியோர் வழங்கி னர். பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் மூர்த்தி கூறுகையில், மதுரை மாவட்டத்தில் 21 வகை யான பொங்கல் தொகுப்பு 9 லட் சத்து 19 ஆயிரத்து 225 குடும்ப அரிசி அட்டைதாரர்களுக்கு சுமார் ரூ. 46 கோடியே 43 லட்சத்து 23 ஆயிரத்து 775 ரூபாய் மதிப்பில் வழங்கப்படுகிறது. இதை பொது மக்கள் கொரோனா வழிகாட்டு முறைப்படி முக கவசம் அணிந்து சமூக இடைவெளியை கடைப் பிடித்தும் வாங்கிட வேண்டும். மதுரை மாவட்ட நிர்வாகம், சுகா தாரத் துறை போன்றவை கொரோனா மூன்றாவது அலை யினை தடுக்க பல்வேறு முயற்சி களை மேற்கொண்டு வருகிறது அதற்கு தமிழக அரசும் உறு துணையாக இருந்து செயல்படும். தமிழக அரசு கொரோனா மூன்றா வது ஆலையினை தடுப்பதற்கு போதிய முயற்சிகளை மேற் கொண்டு வருகிறது. மதுரை மாவட்டத்தில் உள்ள பொதுமக் கள் அனைவரும் வெளியில் செல்லும்போது கண்டிப்பாக முக கவசம் அணிய வேண்டும். அப்படி அணியவில்லை என்றால் மாவட்ட நிர்வாகம் அபராதம் விதிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மக்களுக்கு விழிப்பு ணர்வை ஏற்படுத்த வேண்டும் என்று கூறினார்.