districts

img

ரூ.7 கோடியில் முடிக்கப்பட்ட திட்டப்பணிகளை அமைச்சர் மூர்த்தி துவக்கி வைத்தார்

மதுரை, ஜூலை 30- மதுரை மாவட்டம் கிழக்கு தொகுதிக்குட்பட்ட மேற்கு ஊராட்சி ஒன்றி யத்தில் ரூ. 7.கோடியே 32. லட்சம் மதிப்பீட்டில் முடி வுற்ற பணிகளை மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தும், புதிய திட்ட பணி களை வணிகவரி மற்றும் பதி வுத்துறை அமைச்சர் மூர்த்தி  தொடங்கி வைத்தார்.  இதில் மஞ்சம்பட்டியில் புதிய நியாயவிலை கடை  மற்றும் ஊராட்சி ஒன்றிய பள்ளி சுற்றுச்சுவர் கட்டி டத்தை திறந்து வைத்து, புதிய அங்கன்வாடி கட்டி டம் கட்டும் பணியினையும் துவக்கி வைத்து பயனாளி களுக்கு நலத்திட்ட உதவி களை அமைச்சர் வழங்கி னார். பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்று கொண்டார்.  இதனை தொடர்ந்து புதிதாக கட்டி முடிக்கப்பட்ட காவனூர் ஊராட்சி மன்ற அலுவலகத்தையும், நியாய விலை கடையினையும் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார். வெளிச்சநத்தம் பகுதியில் நியாய விலை  கடையினையும், மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான கடன் உதவியினையும் வழங்கி 23 திட்ட பணிகளை  அமைச்சர் மூர்த்தி துவக்கி  வைத்தார். இந்நிகழ்ச்சியில்  மதுரை மாவட்ட ஆட்சித்  தலைவர் சங்கீதா, சோழ வந்தான் சட்டமன்ற உறுப்பி னர் ஏ.வெங்கடேசன் உள் ளிட்ட அனைத்து துறை அதி காரிகள் மற்றும் திமுக நிர்வா கிகள் என பலரும் கலந்து கொண்டனர்.