மதுரை, ஏப்.18- மதுரை மாவட்டம் திரு மங்கலம் அருகில் கள்ளிக் குடி ஒன்றியத்தில் மையிட் டான் பட்டி கிராமத்தைச் சார்ந்த 100 நாள் வேலை திட்டப் பணித்தள பொறுப்பா ளர் நாகலட்சுமி(31), கவுன் சிலர்கள், கிளார்க்கின் மிரட் டலால் ஓடும் பேருந்தில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார். இவ ருக்கு ஐந்து பெண் குழந்தை கள் உள்ளனர். இந்த நிலையில் இறந்த நாகலட்சுமியின் குடும்பத் திற்கு குழந்தைகளுக்கு நிவாரணம் வழங்கக்கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, ஜனநாயக மாதர் சங் கம், அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் தலை மையில் 4 நாட்கள் போராட் டம் நடைபெற்றது. அதன் பின்னர் அமைச்சர் பெ. மூர்த்தியின் சொந்த நிதியில் இருந்து 5 குழந்தைகளுக்கு தலா 1லட்சம் என்ற முறை யில் ரூ.5 லட்சம் வழங்குவ தாக உறுதியளித்தார். அத னைத்தொடர்ந்து நாக லட்சுமியின் உடலை பெற்று கொண்டனர். அந்த 5லட்சம் ரூபாயை 5 குழந்தைகளின் பெயரில் டெபாசிட் செய்து 18 வயது பூர்த்தி அடையும் போது அந்த பணத்தை எடுத்து பயன்படுத்தி கொள் ளும் படி பாண்டு கள்ளிகுடி கனரா வங்கியில் திங்கன்று காலை டெபாசிட் செய்யப் பட்டது. இந்த நிகழ்வில் மாதர் சங்க மாநிலச் செய லாளர் எஸ்.கே.பொன்னுத் தாய், விவசாயத் தொழிலா ளர்கள் சங்க மாவட்டச் செய லாளர் வி.உமாமகேஸ்வ ரன், மாதர் சங்க மாவட்ட பொருளாளரும் மாமன்ற உறுப்பினருமான என்.விஜயா, மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்டு கட்சியின் கள்ளிக்குடி ஒன்றிய செயலாளர் பி. ராஜேந்திரன் ஆகியோர் உட னிருந்தனர்.