இராமநாதபுரம், ஆக.20- இராமநாதபுரம் மாவட்டம், உச்சிப் புளி அரசு ஆரம்ப சுகாதார நிலை யத்தில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு துறையின் மூலம் புதிதாக கட்டப்பட்ட துணை சுகாதார நிலையங்கள், வெளி நோயாளிகள் பிரிவு, செவிலியர் குடியிருப்பு மற்றும் கண் அறுவை சிகிச்சை அரங்கம் திறப்பு விழா ஆகஸ்ட் 18 அன்று நடை பெற்றது. இந்நிகழ்ச்சிக்கு இராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் கே. நவாஸ்கனி முன்னிலை வகித்தார். தமிழக மருத்துவம்-மக்கள் நல் வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிர மணியன் தலைமையேற்று புதிதாக கட்டப்பட்ட மருத்துவக் கட்டடங்களை திறந்து வைத்தார். பின்னர் அமைச்சர் பேசுகையில், இராமநாதபுரத்தில் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க வேண்டி சட்டமன்ற உறுப்பினர் கேட்டுக்கொண் டதற்கிணங்க ரூ1.20 கோடி மதிப்பீட் டில் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகின்றன. அனைத்து அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் இருதய பாதுகாப்பு சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது. கிராம பகுதியில் இரு தயம் பாதுகாப்பு சிகிச்சைக்கு நாள் தோறும் மக்கள் சென்று மருத்துவரி டம் ஆலோசனை பெற்று வருவதுடன் நெஞ்சு வலி உள்ள நபர்களுக்கு அப்பொழுது கொடுக்க வேண்டிய 14 வகை மாத்திரைகள் உடனடியாக வழங்கப்படுகிறது. இதன் மூலம் மாரடைப்பு தடுக்கப்பட்டு பாது காக்கும் நிலை உருவாகிறது. கண் அறுவை சிகிச்சைக்கும் உரிய மருத்துவ சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருகிறது என்று தெரிவித்தார்.
முன்னதாக அமைச்சர் மா.சுப்பிர மணியன். உச்சிப்புளி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரூ.60 இலட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட வெளி நோயாளி பிரிவு, மண்ட பத்தில் ரூ.25 இலட்சம் மதிப்பீட்டில் செவிலியர் குடியிருப்பு, மண்டபம் கேம்ப்பில் ரூ.24 இலட்சம் மதிப்பீட் டில் துணை சுகாதார நிலையம், காந்தி நகரில் ரூ.20 இலட்சம் மதிப்பீட்டில் துணை சுகாதார நிலையம், சூசை யப்பர் பட்டினத்தில் ரூ.20 லட்சம் மதிப்பீட்டில் துணை சுகாதார நிலை யம், மூக்கையூரில் ரூ.25 இலட்சம் மதிப்பீட்டில் துணை சுகாதார நிலை யம், இராமசாமி பட்டியில் ரூ.25 இலட்சம் மதிப்பீட்டில் செவிலியர் குடியிருப்பு, பரமக்குடியில் ரூ.60 லட்சம் மதிப்பீட்டில் கண் அறுவை சிகிச்சை கட்டடம் என மொத்தம் ரூ.2.59 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப் பட்ட கட்டிடங்களை மக்கள் பயன் பாட்டிற்காக திறந்து வைத்தார். அதனைத் தொடர்ந்து டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதி யுதவி திட்டத்தின் கீழ் 25 கர்ப்பிணி பெண்களுக்கு ஊட்டச்சத்து பரிசு பெட்டகத்தினை அமைச்சர் மா.சுப்பிர மணியன் அவர்கள் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட வரு வாய் அலுவலர் இரா.கோவிந்த ராஜன், மண்டபம் ஊராட்சி ஒன்றிய குழுத்தலைவர் சுப்புலட்சுமி ஜீவா னந்தம் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.