விருதுநகர், மே.27- விருதுநகரில் ரூ.1387.73 கோடி மதிப்பிலான கூட்டுக்குடிநீர் திட்டப் பணிகள் நடைபெற உள்ளது. அப்பணிக்கான அடிக்கல்லை நாட்டியதோடு, ரூ. 299.59 கோடியில் முடிவுற்ற பாதாளச்சாக்கடை பணி களை நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் கே.என்.நேரு துவங்கி வைத்தார். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள 11 ஒன்றி யங்களைச் சார்ந்த 1286 குடியிருப்புகளுக்கு மற்றும் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி, கயத்தாறு ஒன்றி யங்களைச் சார்ந்த 45 வழியோர குடியிருப்பு களுக்கான ரூ.1387.73 கோடி மதிப்பிலான கூட்டுக் குடிநீர் திட்டத்திற்கான அடிக்கல்லை நகராட்சி நிர்வா கம்-குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் கே.என்.நேரு நாட்டினார். மேலும் ரூ.48.39 கோடி மதிப்பில் சாத்தூர் நகராட்சியில் முடிவுற்ற பாதாள சாக்கடைத் திட்டப் பணிகள் மற்றும் ரூ.251.20 கோடி மதிப்பில் இராஜ பாளையம் நகராட்சியில் முடிவுற்ற பாதாள சாக்க டைத் திட்டப் பணிகளையும் அமைச்சர் துவக்கி வைத்தார். விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட ரங்கில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சி யர் ஜெயசீலன், வருவாய்-பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்தி ரன், நிதி- மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு ஆகியோர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.