திருவனந்தபுரம், செப். 1- கடந்த 5 ஆண்டுகளில் தேவ சம்போர்டுகள் மற்றும் கோவில் களுக்கு அரசு கருவூலத்தில் இருந்து ரூ.450 கோடி செலவிடப் பட்டுள்ளதாக தேவஸ்வம் (அற நிலையத்துறை) அமைச்சர் கே.ராதாகிருஷ்ணன் சட்டசபை யில் தெரிவித்தார். சட்டப்பேரவையில் புதனன்று (ஆக.31) உறுப்பினர் எம்.எஸ். அருண்குமார் தாக்கல் செய்த மனு வுக்கு பதிலளித்து அமைச்சர் மேலும் கூறியதாவது: கோவில்களின் வருமானம் அரசு கஜானாவுக்கு வருவ தில்லை; கம்யூனிஸ்ட் அரசுகள் இந்துக் கோயில்களைக் கையகப் படுத்துவதாகவும், வருவாய்க்காக இதைச் செய்கின்றன என்றும் உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி இந்து மல்ஹோத்ரா கூறியிருப்பதில் உண்மை இல்லை. தேவஸ்வம் வாரியத்தின் கீழ் உள்ள கோயில் களின் வருமானம் அரசுக்குச் சென்ற டைகிறது என்ற தகவல் உண்மை க்குப் புறம்பானது. வெள்ளம், கோவிட் போன்றவற்றால் கோயில் களில் வருவாய் இழப்பு ஏற்பட்ட போது, அரசு நிதியுதவியால் தேவசம்போர்டுகளின் அன்றாடச் செலவுகள், அதிகாரிகளின் சம்ப ளம், ஓய்வூதியம் ஆகியவை தடையின்றி நடந்து வந்தன. சபரிமலை மாஸ்டர் பிளான் போன்ற வளர்ச்சித் திட்டங்களை திறம்பட செயல்படுத்தவும், சுமூக மான பயண வசதிகளை ஏற்படுத்த வும் அரசு முன்னுரிமை அளித்து வரு கிறது. ரூ.118 கோடி செலவில் சபரி மலை இடைத்தங்கல் நிலையங்கள் கட்டும் பணி நடைபெற்று வரு கிறது. சோட்டாணிக்கரை கோவி லில் கழிவுகளை அகற்றும் ஆலை அமைக்க ரூ.25 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. பத்மநாபசுவாமி கோவிலின் பாதுகாப்புக்கு ஒதுக்கப்பட்ட தொகையும் கூடுத லாக உள்ளது என அமைச்சர் பதி லளித்தார்.