districts

img

திறன்மேம்பாட்டு மையத்தில் பயிற்சிபெறுவோரின் வேலைக்கு அமைச்சர் உத்தரவாதம்

மதுரை, அக்.3- வர்த்தகத் துறையிலும்,வேலை வாய்ப்பிலும் பெண்கள் சிறந்து விளங்க  தமிழ்நாடு அரசு பல்வேறு நலத்திட்டங் களை செயல்படுத்தி வருகிறது என்றார் தக வல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல்  சேவைகள் துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்.  மதுரை மத்திய சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட எஸ்.எஸ்.காலனி நாவலர் தெரு  பகுதியில் கீழ் இலவச தகவல் தொழில் நுட்பத் திறன் மேம்பாட்டு பயிற்சி மையத்தை அமைச்சர் பழனிவேல் தியாக ராஜன் திறந்து வைத்தார்.  மதுரை மாநகராட்சி மேயர் இந்தி ராணி, மத்திய மண்டலத் தலைவர் பாண்  டிச்செல்வி, 61- ஆவது வார்டு மாமன்ற உறுப்பினர் செல்வி, திமுக நிர்வாகிகள் மற்றும் குடியிருப்போர் நல சங்கங்களைச் சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர். நிகழ்வில் பேசிய அமைச்சர், “2016-இல் எதிர்க்கட்சி சட்டமன்ற இருந்தபோதே சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம்,புகார் பெட்டி,24 மணி நேர குறைதீர் அழைப்பு மையம் என பல்வேறு வழிமுறைகள் மூலம் மக்களுடைய கோரிக்கைகளை அறிந்து அதன் மூலம் திட்டப்பணிகளை நிறைவேற்றி வருகிறேன். கடந்த ஐந்தாண்டுகளில் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து 150-க்கும்  மேற்பட்ட திட்டப்பணிகள் நிறைவேற்றப் பட்டுள்ளது. சட்டமன்ற உறுப்பினர் அலுவலக இ- சேவை மையம் மூலம் 670 சான்றுகள் பெற்றுத் தரப்பட்டுள்ளது. எதிர்க்கட்சி சட்ட மன்ற உறுப்பினராக கடந்த ஐந்தாண்டு களில் 100 பேருக்கு மட்டுமே முதியோர், விதவை உதவி தொகை பெற்றுத்தர முடிந்  தது. ஆனால் தற்போது இரண்டு ஆண்டு களில் 1000-க்கும் மேற்பட்டோருக்கு உத வித்தொகை வழங்கப்பட்டுள்ளது.  வர்த்தகத் துறையிலும், வேலை வாய்ப்பிலும் பெண்கள் சிறந்து விளங்க  முதல்வர் முக ஸ்டாலின் தலைமையிலான அரசு பல்வேறு நலத்திட்டங்களை செயல் படுத்தி வருகிறது. திறன் மேம்பாட்டு மையத்தின் மூலம் பயிற்சி பெறும் மக ளிருக்கு எனது துறையின் மூலம் வேலை வாய்ப்பு பெற்றுத்தரப்படும் என்றார்.