districts

img

மழைநீர் தேங்கிய பகுதிகளில் அமைச்சர் கீதாஜீவன் ஆய்வு

தூத்துக்குடி, நவ.2 தூத்துக்குடியில் பலத்தமழை காரணமாக மழைநீர் தேங்கிய பகுதிகளில் அமைச்சர் கீதாஜீவன் ஆய்வு செய்து, தேங்கிய தண்ணீரை அப்புறப்படுத்த நடவடிக்கை மேற்கொண்டார். வடகிழக்கு பருவமழை தொடங்கி யதில் இருந்து தூத்துக்குடி மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டத்தில் செவ்வாய் மாலை பலத்த மழை பெய்தது. இதனால் தூத்துக்குடி மாநக ரில் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கி யது. இந்த மழைநீரை அகற்றுவதற்கான பணிகளில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டனர். தூத்துக்குடியில் செவ்வாய் இரவு பெய்த கனமழையால் டூவிபுரம், பண்டுகரை சாலைகளில் தண்ணீர் தேங்கி யுள்ள பகுதியை அமைச்சர் கீதாஜீவன் நேரில் சென்று ஆய்வு செய்தார். அப்போது தேங்கிய தண்ணீரை அகற்றுவதற்கு உடனடியாக நடவடிக்கை எடுத்தார். . இதேபோல் திருச்செந்தூர், சாயர்புரம் உட்பட மாவட்டத்தின் பல பகுதி யிலும் பலத்த மழை பெய்ததால் விவசாயி கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

மாவட்டத்தில் அதிகபட்சமாக எட்டயபுரத்தில் 66.4 மில்லி மீட்டரும், திருச்செந்தூரில் 64 மில்லி மீட்டரும், கழுகுமலையில் 59 மில்லி மீட்டரும், கடம்பூரில் 56 மில்லிமீட்டரும், கோவில்பட்டியில் 55 மில்லிமீட்டரும் மழை பதிவானது. ஓட்டப்பிடாரம், புதியம் புத்தூர் பகுதியில் இதுவரை பெய்யாத அளவிற்கு செவ்வாயன்று பலத்த மழை பெய்தது. தூத்துக்குடி மாவட்டத்தில் புதன் முதல் வருகிற 5-ஆம் தேதி வரை இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்யக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்து உள்ளது. இதனை தொடர்ந்து மாவட்ட நிர்வாகம் சார்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வரு கின்றன. தாழ்வான பகுதிகளில் உள்ள மக்கள் விழிப்புடன் இருக்கவும், அனைத்து துறை அதிகாரிகளும் தயார்நிலையில் இருக்கவும் அறிவுறுத்தப்பட்டு உள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்தில் புதனன்று காலை வரை பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:- காயல்பட்டினம்-47, குலசேகரன்பட்டினம்- 46, மணியாச்சி-41, ஓட்டப்பிடாரம் -39, கயத்தாறு-37, விளாத்தி குளம்-36, ஸ்ரீவைகுண்டம்-26 காடல்குடி-25, சாத்தான்குளம்-25, தூத் துக்குடி-18.4, சூரன்குடி-14, வேடநத்தம்-10