மதுரை, மார்ச் 28- பால் கொள்முதல் விலையை உயர்த்தக் கோரி மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே தொட்டப்ப நாயக்கனூர் விலக்கில் பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தினர் பாலை சாலையில் கொட்டி மறியலில் ஈடு பட்டனர். போராட்டத்திற்கு பால் உற்பத்தி யாளர்கள் சங்க தலைவர் வெண்மணி சந்திரன், மாவட்டச் செயலாளர் பி.எஸ்.முத்துப் பாண்டி, பொருளாளர் சாமி ஆகி யோர் தலைமை வகித்தனர். கிராம பால் பண்ணை தலைவர்கள் சண்முகம் ஞானப் பிரகாசம், தமிழ் பாண்டி, சின்னச்சாமி முரு கன், விக்கி, அர்ச்சுனன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.