திருவில்லிபுத்தூர், மே 13- தமிழ்நாடு பால் உற்பத்தியாளர் சங்கத் தின் விருதுநகர் மாவட்ட சிறப்பு பேரவை திருவில்லிபுத்தூரில் வெள்ளிக்கிழமை அன்று நடைபெற்றது. பேரவைக்கு எஸ்.மனோஜ் குமார் தலைமை தாங்கினார். தமிழ்நாடு விவசா யிகள் சங்கத்தின் மாவட்ட செயலாளர் வி.முருகன் துவக்கி வைத்துப் பேசினார். விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட தலை வர் ஏ.விஜய முருகன் வாழ்த்திப் பேசினர். பால் உற்பத்தியாளர் சங்கத்தின் மாநிலப் பொதுச்செயலாளர் கே. முகமது அலி நிறைவுரையாற்றினார். பேரவையில் ஏழு பேர் கொண்ட அமைப்புக்குழு தேர்வு செய்யப்பட்டது. அமைப்புக் குழுவின் கன்வீனராக எஸ்.மனோஜ் குமார் தேர்வுசெய்யப்பட்டார். சத்துணவில் குழந்தைகளுக்கு பால் பவுடர் வழங்க வேண்டும். ஆவின்பால் விற் பனைக்கான கமிஷன் தொகையை உயர்த்தி விற்பனையை அதிகப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தி தீர்மா னங்கள் நிறைவேற்றப்பட்டன.