சின்னாளபட்டி, ஜூலை11- தமிழ்நாடு பால் உற்பத்தியா ளர்கள் சங்கத்தின் திண்டுக்கல் மாவட்ட மாநாடு செம்பட்டியில் ஞாயிறன்று நடைபெற்றது. மாநாட்டிற்கு ஏ.ராஜரத்தினம் தலை மைத் தாங்கினார்.. எஸ்.பிச்சை மணி வரவேற்றார். ஆர். பாண்டிய ராஜன் மாநாட்டுக் கொடியை ஏற்றி வைத்தார் . ஆர்.தயாளன் அஞ்சலி தீர்மானத்தை வாசித்தார். பால் உற்பத்தியாளர் சங்கத்தின் மாவட்ட அமைப்பாளர் மா.சங்கர் வேலையறிக்கை சமர்ப்பித்தார். முன்னாள் மாநிலத் தலைவர் பி. செல்வராஜ், விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் என்.பெரு மாள்,சிஐடியு ஒன்றிய கன்வீனர் வி.கே.முருகன், சிபிஎம் மாவட்டக் குழு உறுப்பினர் சூசை மேரி ஆகி யோர் வாழ்த்துரை வழங்கினர். மாநாட்டில் மாவட்டத் தலைவராக எம். ராமசாமி, செயலாளராக எம். சங்கர், பொருளாளராக எம்.காசி மாயன் ஆகியோர் தேர்வு செய்யப் பட்டனர். ரெட்டியார்சத்திரம் ஒன்றி யம் தருமத்துப்பட்டியில் கட்டி முடிக்கப்பட்ட சிறு பால் குளிரூட்டும் நிலையத்தை விரைவில் திறக்க வேண்டும். பால் கொள்முதல் விலையை 10 ரூபாய் உயர்த்தி பசும்பால் லிட்டர் ஒன்றுக்கு ரூ 42 ஆகவும், எருமைப்பால் லிட்டர் ஒன்றுக்கு ரூ.51 ஆகவும் விலை நிர்ணயம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன பாண்டி யராஜன் நன்றி கூறினார்.