districts

img

சுற்றுலா தினத்தை கொண்டாடிய மெட்ரோ

கொச்சி, செப்.27- உலக சுற்றுலா தினத்தில் கேரள கலை வடிவங்களின் அணிவகுப்பின் ஒரு பகுதியாக கொச்சி மெட்ரோவில் பல்வேறு கலை வடிவங்கள் நிகழ்த்தப் பட்டன. சுற்றுலாவை மேம்படுத்தவும், பல்வேறு கலை வடிவங்களை மக்களிடம் கொண்டு சேர்க்கும் வகையிலும் இந்நிகழ்ச்சி நடத்தப்பட்டது. கதகளி, தையம், துள்ளல், மோகினி யாட்டம், திருவாதிரை நடனம், ஒப்பனை  உடைகளில் கலைஞர்கள், மாணவர்கள் மெட்ரோவில் பயணம் செய்தனர். தெற்கு மெட்ரோ நிலையத்திலிருந்து ஜேஎல்என் ஸ்டேடியம் மெட்ரோ நிலையத்திற்கு வந்த கலைஞர்களை கேஎம்ஆர்எல் நிர்வாக இயக்குநர் லோக்நாத் பெஹ்ரா வரவேற்றார்.  ஸ்டேடியம் மெட்ரோ ரயில் நிலை யத்தில் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. சாவர இன்ஸ்டிடியூட், சாவரா கலாச்சார மையம், உலக மலை யாளி கவுன்சில், ஜிசிடிஏ, கொச்சி கார்ப்பரேஷன் மற்றும் டிடிபிசி ஆகிய வற்றின் ஒத்துழைப்புடன் இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது.