districts

img

இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் பழனி நகர்க்குழு சார்பில் மகாத்மா காந்தியின் நினைவு தினம்

சிதம்பரம், ஜன.30- சிதம்பரம் அருகே மஞ்சக்குழி ஊராட்சிக்கு உட்பட்ட கொடிகால் நகருக்கு செல்லும் வழியில் 40-க்கும் மேற்பட்ட ஆதி திராவிட மக்கள் வசித்து வருகிறார்கள். இதில் செல்வி, மற்றும் பழனியம்மாள் ஆகியோரது குடிசைக்கு சனிக்கிழமை இரவில் சிலர் தீ வைத்துவிட்டு ஓடிவிட்டனர். குடிசைக்குள் இருந்தவர்களின் அலறல் சத்தம் கேட்டு அருகில் வசிப்போர் தண்ணீர் ஊற்றி தீயை அணைத்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் மாதவன், தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநில செய லாளர் வாஞ்சிநாதன், பரங்கிப்பேட்டை வடக்கு ஒன்றிய செயலாளர் விஜய், தெற்கு ஒன்றிய செயலாளர் ஆழ்வார், பரங்கிப் பேட்டை நகர செயலாளர் வேல்முருகன், விவசாய ஒன்றிய செயலாளர் கொளஞ்சி, வாலிபர் சங்க மாவட்ட தலைவர் காந்தி உள்ளிட்ட மார்க்சிஸ்ட் கட்சியினர் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டுப் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறினார்கள். இதுகுறித்து அந்தப் பகுதியில் உள்ள பொதுமக்கள் கூறுகையில் கடந்த இரண்டு நாட்களுக்கு பெண்கள் இயற்கை உபாதை களை கழிக்கச் சென்றபோது கொடிக்கால் பகுதியை சேர்ந்த சில இளைஞர்கள் செல்போன் மூலமாக படம் எடுத்துள்ளனர். இதனால்  இருதரப்பிற்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இந்தநிலையில் செல்போனில் பெண்களைப் படம் எடுத்தவர்களுக்கு ஆதர வாக இதே பகுதியில் வசிக்கும் சாதி ஆதிக்க பிரிவை சேர்ந்த சதிஷ்குமார் என்ப வர் சாதி ஆதிக்க சக்திகளுக்கு ஆதர வாக பேசியுள்ளார்.இந்த நிலையில் குடிசை களுக்கு தீ  வைக்கப்பட்டுள்ளது.