மதுரை, செப்.1- மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை குட முழுக்கு விழா நடைபெறுவது வழக்கம். ஆனால் கடந்த 2018 ஆம் ஆண்டு வீர வசந்த ராயர் மண்டபத்தில் ஏற்பட்ட தீ விபத்தை தொடர்ந்து 2021 ஆம் ஆண்டு நடைபெறவிருந்த கும்பாபிஷேக பணி களில் சுணக்கம் ஏற்பட்டது. இந்த நிலையில் கடந்த சில மாதங்க ளுக்கு முன்பு ரூ.18 கோடி மதிப்பில் வீர வசந்த ராயர் மண்டபத்தை புனரமைக்க தமிழக அரசு உத்தரவிட்டு அதற்கான பணிக ளை துவங்கி தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில், குடமுழுக்கு விழா நடத்துவதற்காக கோவிலின் மற்ற பகுதிக ளிலும் திருப்பணி மேற்கொள்ள அனுமதி வேண்டி கோவில் நிர்வாகம் சார்பில் மாநில திருப்பணி வல்லுநர் குழு ஒப்புதல் வேண்டி விண்ணப்பம் செய்து இருந்த நிலையில் அதற்கான அனுமதியை வல்லுநர் குழு அளித்துள்ளது. குறிப்பாக கோவில் வளாகத்தில் உள்ள 14 பகுதிகளில் முதல் கட்டமாக சுமார் 229 பணிகளை மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் இந்து அறநிலையத்துறை இணை ஆணையர், மூத்த பொறியாளர், தொல்லியல் துறை ஆய்வாளர்கள் என 13 பேர் அடங்கிய நிபுணர் குழு அனுமதி தெரிவித்துள்ளது. மேலும் திருப்பணிகளை மேற்கொள்வ தற்கு முன்னதாக கோவில் வளாகத்தை ஆவணப்படுத்த திருப்பணி வல்லுனர் குழு உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த நிலையில் வரும் செப்டம்பர் 4 அன்று ராஜகோபுரங்கள் மற்றும் ஐந்து கோபுரங்களுக்கு பாலாலயம் நடத்த கோவில் நிர்வாகம் முடிவு செய்துள்ளது. மீனாட்சி அம்மன் கோவில் வளாகத்தில் உள்ள புதிய கல்யாண மண்டபம், ஆயிரம் கால் மண்டபம், வடக்கு ஆடி வீதி, மேற்கு ஆடி வீதி, சித்திரை வீதி, 5 நிலை கோபுரங் கள், ராஜகோபுரங்கள், புது மண்டபங் கள் என 14 பகுதிகளுக்கு அனுமதி வழங்கப் பட்டுள்ளது. மேலும் இரண்டு ஆண்டுக ளுக்குள் பணிகளை முழுமையாக முடித்து குடமுழுக்கு விழா நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.