districts

img

தேனி மாவட்டத்தில் மேதினம் கோலாகலம்

தேனி, மே 1- தேனி மாவட்டத்தில் 100-க்கும் மேற்பட்ட இடங்களில் செங்கொடி ஏற்றப்பட்டு மே தினம் உற்சாகமாகக் கொண்டாடப்பட்டது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேனி மாவட்டக்குழு அலுவலகத்தில்  தேனி  மாவட்டச் செயலாளர் ஏவி.அண்ணாமலை  கட்சிக் கொடியை ஏற்றினார்.  தேனி கட்சி அலுவலகம், நகராட்சி அலு வலகம், பழனிசெட்டிபட்டி உள்ளிட்ட இடங்க ளில் நடைபெற்ற கொடியேற்று நிகழ்ச்சிக ளில் மாவட்டச் செயற்குழு உறுப்பினர் சி.முரு கன், தாலுகா செயலாளர் இ.தர்மர் டி.நாக ராஜ், டி.ஜெயபாண்டி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். போடியில் கட்சி அலுலவகம் உட்பட ஆறு  இடங்களில் நடைபெற்ற கொடியேற்று நிகழ்வில் மாவட்டச் செயற்குழு உறுப்பினர்  சி.முனீஸ்வரன், தாலுகா செயலாளர் எஸ். செல்வம், செல்வராஜ், எஸ்.கே.பாண்டி யன், பி.சந்திரசேகர் உள்ளிட்ட பலர் பங்கேற்ற னர்.

தேவாரம்  உட்பட பல்வேறு இடங்களில் நடைபெற்ற நிகழ்வில் மாவட்டச் செயலா ளர் ஏ.வி.அண்ணாமலை, ஏரியா செயலாளர்  ராஜா, சி.வேலவன், எஸ்.சுருளிவேல் உள் ளிட்ட பலர் பங்கேற்றனர். சின்னமனூர் உட்பட ஆறு இடங்களில் நடைபெற்ற நிகழ்வில் ஒன்றியச்செயலாளர் கே.எஸ்.ஆறுமுகம், கரண்குமார், மணிகண்  டன், பி.ஜெயராஜ், ஈஸ்வரி  உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். பெரியகுளம் கட்சி அலுவலகம் உள்பட   பல்வேறு இடங்களில் நடைபெற்ற நிகழ்வில் மாவட்டச்செயற்குழு உறுப்பினர்கள்  எம்.ராமச்சந்திரன், சு.வெண்மணி, தாலுகா  செயலாளர் எம்.வி.முருகன்,  பி.இளங்கோ வன், ஆர்.கே.ராமர், மன்னர்மன்னன் உள் ளிட்ட பலர் பங்கேற்றனர். பாளையம் உட்பட பல்வேறு இடங்க ளில் நடைபெற்ற நிகழ்வில்  ஏரியா செயலா ளர் எஸ்.சஞ்சீவிக்குமார், எஸ்.லட்சுமணன், டி.கே.சீனிவாசன், தங்கமாயி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். கம்பத்தில் 35 இடங்களில் நடைபெற்ற  கொடியேற்று நிகழ்வில்  ஏரியா செயலாளர்  கே.ஆர்.லெனின், சிஐடியு  ஏரியா செயலா ளர் மோகன்,  எஸ் .பன்னீர்வேல், பாலகுரு நாதன், எஸ்.கனகராஜ் பி.அய்யப்பன் கே. முருகன், ஜி.மணிகண்டன், எஸ்.முருகன்,  டி.மணிவண்ணன் உட்பட பலர் பங்கேற்ற னர். கூடலூர் உட்பட எட்டு இடங்களில் நடை பெற்ற நிகழ்வில் ஏரியா செயலாளர் பி.ஜெய ராஜ், பி.ஜெயன், ஜி.பி.முருகன், வாணி, பிரியா உட்பட பலர் பங்கேற்றனர். ஆண்டிபட்டி கட்சி அலுவலகம் உட்பட அலுவலகம் உட்பட ஆறு இடங்களில் நடை பெற்ற நிகழ்வில் மாவட்டச் செயற்குழு உறுப்பினர் டி.வெங்கடேசன், ஒன்றியச் செய லாளர் மா.தங்கராஜ், கே.தயாளன், வி. சின்னன், தங்கவேல் உள்ளிட்ட பலர் பங் கேற்றனர். கடமலைக்குண்டு அருகே உள்ள கரட்டுப்  பட்டியில் விவசாயிகள் சங்க மாவட்டச் செய லாளர் கண்ணன் மேதினக் கொடியை ஏற்றி  வைத்தார். கட்சின் கடமலை-மயிலை ஒன்றி யச் செயலாளர் போஸ் உட்பட ஏராளமா னோர் பங்கேற்றனர். தேவராஜ் நகர், கட மலைக்குண்டு, வருஷநாடு, தும்மக்குண்டு கிராமங்களிலும் கொடியேற்றப்பட்டது. 

பேரணி

தேனியில் நடைபெற்ற மேதினப் பேர ணிக்கு சிஐடியு தேனி மாவட்ட பொருளா ளர் ஜி.சண்முகம், ஏஐடியுசி மாவட்டச் செய லாளர் எம்.எஸ்.பி.ராஜ்குமார் ஆகியோர் தலைமை வகித்தனர்.  மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயற்குழு உறுப்பினர் டி.வெங்கடேசன், சிஐடியு  தேனி மாவட்டத் தலைவர் டி.ஜெயபாண்டி, ஏஐடியுசி கட்டடத் தொழிலாளர் சங்க மாவட்டச் செயலாளர் எஸ்.ஆலன், சிஐடியு  மாநில செயலாளர் ஆர்.எஸ்.செண்பகம், ஏஐடியுசி மாநில நிர்வாகக்குழு உறுப்பினர்  நடராஜன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் தேனி மாவட்டச் செயலாளர் ஏ.வி.அண்ணாமலை, சிபிஐ தேனி மாவட்டச் செயலாளர் கே.பெருமாள், சிஐடியு மாவட்டச்  செயலாளர் எம்.ராமச்சந்திரன் ஏஐடியுசி மாவட்ட பொதுச்செயலாளர் என்.ரவிமுரு கன் உட்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.