விருதுநகர், ஏப்.25- விருதுநகர் ஒன்றியம் ஜி.என்.பட்டி ஊராட்சிக்குட்பட்டது ஆர்.என்.பட்டி. இங்குள்ள இந்திரா காலனியில் 100க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வரு கின்றனர். இங்கு எந்த நலத்திட்டங்களும் செய்து தரப்படவில்லை. இதுகுறித்து ஏப்ரல் 24-ல் நடைபெற்ற கிராம சபையில் கேட்ட போது, தலைவர், துணைத் தலை வர் பதில் கூறவில்லை. ஜன் ஜீவன் மிஷன் திட்டத்தில் இந்திரா காலனியில் பணிகள் நடைபெறவில்லை. பொது கழிப்பிடம், தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்டப் பணி கள் நடைபெறவில்லை. ஆதி திராவிடர் மக்கள் பயன்படுத்தும் சுடுகாட்டு மேற்கூரை, மயானப் பாதை இதுவரை செய்து தரப்படவில்லை. குப்பை அகற்றும் பணியும் நடைபெறவில்லை. எனவே, மே 1-ல் நடைபெறும் கிராம சபைக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் கலந்து கொண்டு குறைகளை நிவர்த்தி செய்ய வேண்டும் என கிராமமக்கள் வலியுறுத்தி யுள்ளனர்.