மதுரை, செப்.13- மதுரை வலையங்குளம் பகுதியில் மதிமுக மாநில மாநாடு செப்டம்பர் 15 அன்று (வெள்ளிக்கிழமை) நடைபெற உள்ளது. அதற்கான முன்னேற்பாட்டு பணிகளை மதிமுக பொதுச் செயலாளர் வைகோ புத னன்று பார்வையிட்டார். முன்னதாக மதுரை விமான நிலையம் வந்த மதிமுக பொதுச்செயலாளர் வைகோ செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், ‘‘பேரறிஞர் அண்ணா வின் 115-வது பிறந்தநாள் விழா மாநாட் டினை மதுரையில் செப்டம்பர் 15 அன்று நடத்த மதிமுக பிரம்மாண்ட ஏற்பாடு செய் துள்ளது. ஒன்றிய அரசின் சர்வாதிகார போக்கை நிறுத்தவும், ஜனநாயகத்தை பாது காக்கவும் உறுதி எடுத்துக்கொண்டு இந்தியா என்கிற கூட்டணியை உருவாக்கி இருக்கிறோம். வரப்போகும் நாடாளுமன்ற தேர்தலில் தமிழ்நாடு, புதுச்சேரி உள்ளிட்ட 40 தொகுதி யிலும் வெற்றி பெறும் நிலைமை ஏற்படும். இந்தியா கூட்டணிக்கு இந்த மாநாடு மேலும் வலு சேர்க்கிறது. பாரத் எனப் பெயர் மாற்றுகிறார்கள். இதைவிட அயோக்கியத்தனமான வேலை வேறு ஒன்றும் இருக்க முடியாது. சனாதன தர்மத்தை நிலை நாட்டும் வேலைகளை செய்து வருகிறார்கள். விஸ்வகர்மா யோஜனா என்பது பழைய குலக் கல்வி திட்டம் தான். இதற்கு பெரிய எதிர்ப்பு கிளம்பியுள்ளது. காவிரி விவகாரத்தில் கர்நாடகா முரட்டுப் பிடிவாதமாக உள்ளது. அது சரியல்ல என்றார். மதுரை விமான நிலையத்தில் வைகோ வை மதிமுக சட்டமன்ற உறுப்பினர் மு. பூமி நாதன் மாவட்ட செயலாளர்கள் முனியசாமி, மார்நாடு, தொண்டரணி செயலாளர் சுருதி ரமேஷ் மற்றும் கழக நிர்வாகிகள் வர வேற்றனர்.