districts

img

மாதர் சங்க இராஜபாளையம் நகர் மாநாடு

இராஜபாளையம், மே 22- அனைத்திந்திய ஜன நாயக மாதர் சங்கத்தின் இராஜபாளையம் நகர் மாநாடு ஞாயிறன்று நகரத் தலைவர் மைதிலி தலைமை யில் நடைபெற்றது. மாவட்ட தலைவர் உமா மகேஸ்வரி துவக்கிவைத்துப் பேசினார். மாநிலச் செயலாளர் லட்சுமி நிறைவுரையாற்றினார்.  மாநாட்டில் நகரத் தலைவ ராக மைதிலி, செயலாளராக மேரி, பொருளாளராக பிரியா  ஆகியோர் தேர்வு செய்யப் பட்டனர். தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்டத்தை ராஜ பாளையம் நகர் பகுதியில் உடனடியாக அமல்படுத்த வேண்டும். நகராட்சி நிர்வா கம் வாரம் ஒரு முறை குடி நீர் விநியோகம் செய்ய  வேண்டும். பெண்களுக்கும் பெண் குழந்தைகளுக்கும் எதிராக நடைபெறும் பாலி யல் தொல்லையில் இருந்து உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்பன உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாவட்ட துணைத்தலைவர் ரேணுகாதேவி உள்பட பெண்கள் கலந்து கொண்ட னர்.