திண்டுக்கல், ஏப்.6- ஒன்றிய மோடி அரசு தொடர்ந்து பெட்ரோல், டீசல் விலை உயர்த்தி வருவதை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி சார்பில் தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடை பெற்று வருகிறது. இதனொரு பகுதியாக திண் டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்தி ரத்தில் நடைபெற்ற போராட்டத் திற்கு ஒன்றியச் செயலாளர் சிவ மணி தலைமை வகித்தார். மாவட் டக்குழு உறுப்பினர் எம்.ஆர்.முத் துச்சாமி பேசினார். மதுரைதிருப்பரங்குன்றம் நகர் கிளைகள் சார்பில் நடை பெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு தாலுகா குழு உறுப்பினர் எஸ்.எம்.பாண்டி தலைமை வகித்தார். மாநில செயற்குழு உறுப்பினர் மதுக்கூர் ராமலிங்கம், முன் னாள் மாநிலக்குழு உறுப்பினர் சி.ராமகிருஷ்ணன், மாவட்டக் குழு உறுப்பினர் வி.முத்துராஜ் ஆகியோர் பேசினர். பரமக்குடியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் மயில் வாகனன், தாலுகா செயலாளர் டி.ராஜா, மாவட்டக் குழு உறுப்பி னர் தட்சிணாமூர்த்தி உள் ளிட்டோர் பங்கேற்றனர். மாதர் சங்கம் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் மேலப்பொன்ன கரம் பகுதிக்குழு சார்பில் கரிமேடு மோதிலால் மெயின் ரோட்டில் கேஸ் சிலிண்டருக்கு மாலை அணிவித்தும், ஒப்பாரி வைத்தும் நூதனப் போராட்டம் மாமன்ற உறுப்பினர் வை. ஜென்னி யம்மாள் தலைமையில் நடை பெற்றது. துவக்கி வைத்து மாவட்ட தலைவர் ஆர். பிரீத்தி பேசினார், மாவட்டச் செயலா ளர் ஆர். சசிகலா நிறைவுரை யாற்றினார். மூத்த தோழர் அங்கயற்கண்ணி, மாவட்டக் குழு உறுப்பினர் மல்லிகா உள்ளிட்ட பலர் கலந்து கொண்ட னர்.