இராமேஸ்வரம், ஜூன் 10- பாலியல் தொந்தரவு கொடுத்த மல்யுத்த அமைப் பின் தலைவரும் பாஜக எம்.பி.யுமான பிரிஜ் பூஷன் சரண் சிங்கை கைது செய் யக்கோரி மல்யுத்த வீராங்க னைகள் மற்றும் வீரர்கள் தில்லியில் தொடர் போராட் டத்தை நடத்தி வருகின்றனர். மல்யுத்த வீராங்கனை களின் போராட்டத்திற்கு ஆத ரவாகவும் பாஜக எம்.பி.நட வடிக்கை எடுக்கக்கோரியும் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் மற்றும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் இராமேசுவரம் தலை மை தபால் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாதர் சங்க தாலுகா செய லாளர் ஆரோக்கிய நிர்மலா, வாலிபர் சங்க நிர்வாகி கார்த் திக் ஆகியோர் தலைமை வகித்தனர். வாலிபர் சங்க முன்னாள் நிர்வாகிகள் கருணாகரன்,சிவா, மற்றும் அசோக் ராமச்சந்திரபாபு ஆகியோர் பேசினர்.