தேனி, ஏப்.13- தேனி மாவட்டத்தில் க. விலக்கில் உள்ள மாவட்ட தலை மை அரசு மருத்துவமனையில் ஜனநாயக மாதர் சங்கத்தின் சார்பில் ஆய்வு நடத்தப்பட்டது. மாவட்ட மருத்துவமனை இயக்குனர் அழகு மீனாட்சி சுந்தரத்தை நேரில் சந்தித்து மருத்துவமனை பற்றிய தக வல்களை கேட்டறிந்தனர்.மேலும் உள் நோயாளிகள், பார்வையாளர்கள், பணி புரியும் ஊழியர்களிடமும் ஆய்வு நடத்தப்பட்டது. இந்த ஆய்வில் மாவட்ட தலைவர் எஸ். மீனா, மாவட்டச் செயலாளர் பி. சித்ரா, மாவட்ட துணைத் தலைவர் எஸ். வெண்மணி, தாலுகா நிர்வாகி எஸ். கவிதா ஆகியோர் பங்கேற்றனர். செயற்கை உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை, தலைக் காயப் பிரிவு வசதி இல்லை. அதற்கான மருத்துவர்கள் , உபகரண கரு விகள் என தனிப்பிரிவு வந் தால் மக்களுக்கு இன்னும் கூடுதலான பயன்படும் என வும் இதற்காக மதுரைக்கு நோயாளிகளை அனுப்பும் சிர மம் குறையும் என்றும் கருத்து தெரிவித்தார்கள். திருவில்லிபுத்தூர் திருவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனையில் ஜன நாயக மாதர் சங்கத்தின் மாவட்ட நிர்வாகி ரேணுகா தேவி தலை மையில் ஒன்றிய நகர நிர்வாகி கள் ஆய்வில் ஈடுபட்டனர்.மேலும் சிறப்பாக செயல்பட அடுக்குமாடி வசதிகளுடைய கட்டிடங்களும், ஜெனரேட்டர், ஸ்கேன் போன்ற வசதிகளை யும் செய்து தர வேண்டும் என்று வலியுறுத்தினர்.