மதுரை ஜூலை 20- அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் மதுரை புறநகர் மாவட்டம் கள்ளிக்குடி தாலுகா அமைப்பு பேரவை லட்சுமி தலைமையில் நடைபெற்றது. சங்கத்தின் மதுரை புறநகர் மாவட்ட தலைவர் க.பிரேமலதா துவக்கி வைத்து பேசினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தாலுகா செயலாளர் ராஜேந்திரன், விவசாய தொழிலாளர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் சொ.பாண்டியன் ஆகியோர் வாழ்த்தி பேசினர். கள்ளிக்குடி தாலுகா தலைவராக லட்சுமி, செயலா ளராக கவிதா, பொருளாளராக ராஜலட்சுமி, துணை தலை வராக பத்மா, துணை செயலாளராக சித்ரா தேவி என ஒன்பது பேர் கொண்ட தாலுகா குழு தேர்வு செய் யப்பட்டது. சங்கத்தின் புறநகர் மாவட்ட செயலாளர் செ.முத்து ராணி நிறைவு செய்து பேசினார்.