புதுக்கோட்டை, டிச.4- கீரனூரில் இருந்து புலியூர் கிராமத் திற்கு பேருந்து வசதி ஏற்படுத்தித்தர வலியு றுத்தி அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் சார்பில் வெள்ளியன்று கீரனூரில் போராட்டம் நடைபெற்றது. புதுக்கோட்டை மாவட்டம் கீரனூரை அடுத்த தென்னந்திரையன்பட்டி, ஆலங்குடிப் பட்டி, ரெகுநாதபுரம், பாலாண்டார்களம், உறவிக்காடு, கலரிப்பட்டி, மதியானத்தெரு உள்ளிட்ட சிற்றூர்களில் இருந்து பள்ளி, கல்லூரிகளில் படிக்கும் மாணவ, மாணவி கள் கீரனூருக்கு வரவேண்டி உள்ளது. இவர்களுக்கு போதுமான பேருந்து வசதி இல்லாததால் கடும் சிரமத்தை சந்தித்து வரு கின்றனர். எனவே கீரனூரில் இருந்து புலியூருக்கு பேருந்து வசதி கேட்டு அப்பகுதி பொது மக்கள் மற்றும் மாணவர்கள் தொடர்ந்து அதி காரிகளைச் சந்தித்து கோரிக்கை வைத்து வருகின்றனர். கடந்த 2.3.2020 அன்று குளத்தூர் வட்டாட்சியர் தலைமையில் நடைபெற்ற சமாதானப் பேச்சுவார்த்தை யில் இக்கிராமங்களுக்கு பேருந்து வசதி ஏற்படுத்தித் தருவதாக ஒப்புதல் தெரிவிக்கப் பட்டது. ஆனால், இதுநாள் வரை பேருந்து வசதி செய்து தரப்படவில்லை.
இதனைத் தொடர்ந்து அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் சார்பில் அக்டோ பர் 14 அன்று சாலை மறியல் நடத்துவது என அறிவித்து துண்டுப்பிரசும் வெளியிடப் பட்டது. இதனைத் தொடர்ந்து அக்டோபர் 13 அன்று குளத்தூர் வட்டாட்சியர் தலைமை யில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில், 20 தி னங்களுக்குள் பேருந்து வசதி ஏற்படுத்தித் தருவதாக அதிகாரிகள் எழுத்துப்பூர்வமாக உறுதியளித்தனர். ஆனால், இந்த அறி விப்பையும் அதிகாரிகள் காற்றில் பறக்க விட்டுள்ளனர். இந்நிலையில், இக்கோரிக்கையை வலி யுறுத்தி கீரனூரில் மாதர் சங்கத்தினர் வெள்ளியன்று மீண்டும் போராட்டம் நடத்துவ தற்குத் தயாராகினர். இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த புதுக்கோட்டை அரசுப் போக்குவரத்துக்கழக வணிக மேலா ளர் எம்.சுப்பு, குளத்தூர் துணை வட்டாட்சி யர் மணி, காவல் ஆய்வாளர் சாமுவேல்ஞானம் உள்ளிட்டோர் பேச்சுவார்தை நடத்தினர். பேச்சுவார்த்தையில் மாதர் சங்க மாவட்டச் செயலளார் பி.சுசீலா, பொருளா ளர் ஜெ.வைகைராணி, குன்றாண்டார்கோ வில் ஒன்றியத் தலைவர் எம்.மகாலெட்சுமி, சிபிஎம் ஒன்றியச் செயலளார் எஸ்.கலைச் செல்வன், விவசாயிகள் சங்க ஒன்றியச் செய லாளர் பழனிவேல், விவசாயத் தொழிலாளர் சங்க ஒன்றியச் செயலாளர் பெருமாள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். பேச்சுவார்த்தையில் 10 தினங்களுக்குள் கண்டிப்பாக இவ்வழியில் அரசுப் பேருந்து இயக்கப்படும் என அதிகாரிகள் உறுதி யளித்தனர். இதனைத் தொடர்ந்து போராட்டம் ஒத்தி வைக்கப்பட்டது.