districts

img

மனைப் பட்டா வழங்கக் கோரி மாதர் சங்கம் ஆர்ப்பாட்டம்

தருமபுரி, அக்.17- வீடற்றவர்களுக்கு மனைபட்டா, நூறுநாள் வேலைத்திட்டத்தில் வேலை வழங்க கோரி அனைத்திந்திய ஜன நாயக மாதர் சங்கத்தின் சார்பில் ஆர்ப் பாட்டம் நடைபெற்றது. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் 100 நாள் வேலையை 200 நாளாக உயர்த்த வேண்டும். நகர்புற பகுதிகளுக்கும் திட்டத்தை விரிவுபடுத்தி வழங்க வேண்டும். பஞ்சமி நிலங்களை மீட்டு தாழ்த்தப்பட்ட மக்களுக்கு பகிர்ந்து அளிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக் கைகளை முன்வைத்து மாதர் சங்கத்தி னர் தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டத் தில் ஈடுபட்டனர்.  தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டி பட்டி வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு வட்ட தலைவர் கண்ணகி தலைமை  தாங்கினார். வட்ட செயலாளர் பி. கிருஷ்ணவேணி, மாவட்ட துணைசெய லாளர் பூரணி உள்ளிட்டோர் உரையாற் றினர். சிபிஎம் பாப்பிரட்டிபட்டி வட்ட செயலாளர் தி.வ.தனுசன் வாழ்த்தி உரையாற்றினார். முன்னதாக மேற் கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வட்டார வளர்ச்சி அலுவலர் அருள் மொழிதேவனிடம் மாதர் சங்க தலை வர்கள் மனு அளித்தனர்.

சேலம்

சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவல கம் முன்பு நடைபெற்ற  ஆர்ப்பாட்டத் திற்கு மாதர் சங்கம் சேலம் மாவட்ட தலைவர் ஆர்.வைரமணி தலைமை தாங் கினார். இதில் மாநில குழு உறுப்பி னர் எஸ்.ராஜலட்சுமி, மாவட்ட செயலா ளர் எஸ்.எம்.தேவி, மாவட்ட துணை தலைவர் கே.ராஜாத்தி உள்ளிட்ட திர ளானோர் பங்கேற்றனர்.

கோவை

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவ லகம் முன்பு மாதர் சங்க மாவட்ட செய லாளர் சுதா தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், மார்க்சிஸ்ட் கட்சி யின் மாமன்ற உறுப்பினர் சுமதி உள் ளிட்ட திரளானோர் பங்கேற்றனர். முன் னதாக மாவட்ட ஆட்சியரிடம் மேற் கண்ட கோரிக்கைகள் குறித்த தனித்தனி யான 397 மனுக்கள் ஒப்படைக்கப்பட் டது.  இதேபோன்று மாவட்ட பொருளா ளர் உஷா தலைமையில் மேட்டுப் பாளையத்திலும், மாவட்ட துணை செய லாளர் ரேவதி தலைமையில் பொள் ளாச்சியிலும் ஆர்ப்பாட்டம் நடைபெற் றது. இதில், மாவட்ட நிர்வாகிகள் சாந்தா, வனஜா, தங்கமணி, அமுதா, மெஹபுநிஷா உள்ளிட்ட திரளானோர் பங்கேற்றனர்.