மதுரை, செப்.11- சென்னை அரசுப் பள்ளி யில் சொற்பொழிவு என்ற பெயரில் மாற்றுத்திறனாளி களை இழிவுபடுத்தி பேசிய மகாவிஷ்ணுவை கண்டித் தும், மாற்றுத் திறனாளிகள் உரிமைச் சட்டப் படி கடும் நடவடிக்கை எடுக்கக் கோரி யும் தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம், ஜனநாயக மாதர் சங்கம், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், இந்திய மாணவர் சங்கம் ஆகிய அமைப்புகள் சார்பில் செவ்வாயன்று ஆர்ப் பாட்டம் நடைபெற்றது. மதுரை மாவட்ட ஆட்சி யர் அலுவலகம் திருவள்ளு வர் சிலை அருகில் நடை பெற்ற ஆர்ப்பாட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் சங்க மாவட்ட இணைச்செய லாளர் மாமன்ற உறுப்பினர் டி.குமரவேல் தலைமை வகித்தார். மாவட்டத் தலை வர் பி.வீரமணி முன்னிலை வகித்தார். மாவட்டச் செயலாளர் ஆ.பாலமுருகன், மாதர் சங்க மாவட்டச் மாவட்டச் செயலாளர் மாமன்ற உறுப்பி னர் வை.ஜென்னியம்மாள், வாலிபர் சங்க மாவட்டத் தலைவர் அ.பாவேல் சிந் தன், மாவட்டச் செயலாளர் டி.செல்வராஜ், மாணவர் சங்க மாவட்டச் செயலாளர் க.பாலமுருகன் ஆகியோர் பேசினர். மாணவர் சங்க மாவட்டத் தலைவர் டேவிட் ராஜதுரை நன்றி கூறினார்.